வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல: 87% இந்தியர்களுக்கு புற்றுநோய் அபாயம்! உலக சுகாதார நிறுவனம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, September 06, 2018

பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல: 87% இந்தியர்களுக்கு புற்றுநோய் அபாயம்! உலக சுகாதார நிறுவனம்


இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. 

அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும். பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்கள் வர நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியில் தாய்மை உணர்வுடன் நடந்து கொள்ளுமா ஆளும் அரசுகள்?
இது குறித்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 

No comments:

Post a Comment