வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

இந்த சாலையில் கற்கள் பேர்த்துக்கொண்டு, செம்மன் தெரியும்படி உள்ளது. இந்த சாலையானது அகிலி ஊராட்சிக்குட்பட்ட அகிலி காலனிக்கு செல்லும் சாலையாகும்.




மாநில அரசு 8 வழிச்சாலையில் கவனம் செலுத்துகிறதே தவிர இதுபோன்ற ஊரக சாலையை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் 4 மற்றும் 8 வழிச் சாலையினால் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆதாயம் உள்ளது என்பதே இதற்கு சான்று.


தேர்தல் நேரங்களில்தான் ஒரு சில கிராமபுற சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. மேலும், ஆளுங்கட்சியினை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மட்டும் குறுகிய காலத்திலேயே பளபளப்பாக மாறிவிடும். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு சாலையில் பழுது ஏற்பட்டால் அதன் அவல நிலை இதுதான்.



மேற்கண்ட ஊராட்சியில் உள்ளது போல ஏகப்பட்ட சாலைகள் இந்த நிலைமையில்தான் உள்ளது. எனவே, கிராமப்புறப் பகுதிகளின் போக்குவரத்தினை மனதில் கொண்டு இது போன்ற சாலையினை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment