வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 15, 2018

காதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை!



காதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக அவர்கள் இந்த விபரீத முடிவை எடுப்பதாகத் தெரிகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ராதிகா கௌசிக், நேற்று காலை நொய்டாவில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா ஜீ சேனலில் தொகுப்பாளினியாக பணி புரிந்து வந்தவர்.
 
இவர் மேலும் இரண்டு தோழிகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராகுல் என்ற சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ராதிகாவுடன் அந்த வீட்டில் இருந்துள்ளார். ராகுலும், ராதிகாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்னர் ராகுலுக்கும், ராதிகாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகுல் கழிவறை சென்றிருந்த நேரத்தில் மாடியில் இருந்து குதித்து ராதிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராதிகாவின் மரணம் விபத்தா, கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment