வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 14, 2018

இதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது



ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
 
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ஆனந்த் திருமணம் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அம்பானியின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

நந்தா 
அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா, மகள் ஸ்வேதா, பேத்தி நவ்யா நந்தாவுடன் அம்பானி வீட்டு விழாவுக்கு வந்தார். ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்தார்.


ஆராத்யா  
ஐஸ்வர்யா சிவப்பு நிற டிசைனர் சேலை அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தார். அவர் தனது கணவர், மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து அசந்து போகாதவர்களே இல்லை. புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவ்வளவு அழகாக உள்ளார்.

மணமகள்  
ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும். அவர் வந்தால் மணமகளை விட அவர் தான் அதிக கவனம் ஈர்க்கிறார் என்கிறார்கள்.


நெருக்கம்  
அம்பானி வீட்டு விசேஷத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகை தீபிகா படுகோனேவுடன் நெருக்கம் காட்டினார். பார்ட்டியில் அவர் தீபிகாவுடன் சேர்ந்து நெருக்கமாக ஆடி கட்டிப்பிடித்ததை பார்த்தவர்களுக்கு அது புதிதாக இருந்தது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment