வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 12, 2018

டிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..!



வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏறி சாலையை கடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாகனப் பெருக்கத்தால் வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. இதனால் மக்கள் வெறுத்து போகின்றனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்படி வெறுத்து போன ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க பொறுமை இல்லாத அந்த நபர், மின்கம்பத்தில் ஏறி, மின்சார ஒயர்களின் மேல் நடந்து சாலையை கடந்துள்ளார்.
 
இதனை சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. மின்சார கம்பியில் நடக்கும் அந்த நபரை வியட்நாமின் ஸ்பைடர் மேன் என மக்கள் அழைக்கின்றனர். ஷாக் அடிக்காத வரைக்கும் அந்த நபரின் ஐடியா வேலைக்கு ஆகும் என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment