வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 07, 2018

மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது..



மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதன் விளைவாக அவரை கர்ப்பமாக்கியதாக தஞ்சாவூரில் காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

 
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பவணமங்கலத்தில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான செங்கற்சூளை உள்ளது. இந்த செங்கற்சூளையில் பவணமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை செய்துவருகிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதே பகுதியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதமன் (38) என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் 17 வயது சிறுமியிடம் கௌதமன் நெருங்கி பழகியுள்ளார். 
 
பின்னர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த சிறுமியின் தாய் மாதவி (40) திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் மணமல்லி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment