வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பைக் கேட்ட தம்பியின் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 15, 2018

பைக் கேட்ட தம்பியின் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்..



சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கொருக்குப்பேட்டை கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடிபழக்கத்திற்கு அடிமையான அவர், பைக் வாங்கி தருமாறு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவருடைய அண்ணனான வெங்கடேசன் என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந் நிலையில் கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் வெங்கடேசன் சென்றபோது அங்கு வந்த கணேசன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போதையில் இருந்த கணேசன் தொடர்ந்து வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட, ஆத்திரமடைந்த வெங்கடேசன் அங்கு வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனை கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.
 
ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment