வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அங்க சுத்தி! இங்க சுத்தி!.. கடைசியில் தனியார் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 29, 2018

அங்க சுத்தி! இங்க சுத்தி!.. கடைசியில் தனியார் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா..

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல்லை நீக்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு நேற்று மாலை பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.  
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அப்போது கழிவறையில் ரகசிய கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழுந்தது. இதையடுத்து ரகசிய கேமரா கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.


போலீஸார்

அதில் அந்த அறையில் ரகசிய கேமரா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்த பெண் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போலீஸார் சென்றனர்.


தீவிர விசாரணை  

அங்கிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர். அதில் பல்வேறு பெண்களின் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.


போலீஸ் விசாரணை 

இந்த விசாரணையில் கேமராவை பொருத்திய மருத்துவமனை ஊழியர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


கழிவறையில் கேமரா 

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு மருத்துவமனை கழிவறையில் கேமரா வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment