வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 01, 2018

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை



மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் 1 வயது மகளை அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.


பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு, மன்வெல்பாடா பகுதியை சேர்ந்தவர் துஷார்(வயது38). இவரது மனைவி சவுஜானி.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவர்களுக்கு ஹர்சிதா என்ற ஒரு வயது மகள் இருந்தாள். துஷார் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.


இதனால் விரக்தி அடைந்த சவுஜானி கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருகில் உள்ள தாயின் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்தநிலையில் செப்டம்பர் 29-ந்தேதி துஷார் மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு சென்றார். ஆனால் சவுஜானி குடும்பம் நடத்த அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை ஹர்சிதாவின் கால்களை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை ஹர்சிதா பரிதாபமாக உயிர் இழந்தது.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துஷாரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு குழந்தையை அடித்து கொலை செய்த துஷாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறியது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment