வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-08-26
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, September 04, 2018

கல்விக்கான செலவு எந்த நாட்டில் மிகவும் அதிகம்? - ஓர் பார்வை



வசந்த காலம் என்றால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புது கல்வியாண்டின் தொடக்கமாக இருக்கும். ஆனால் யாரவது அமெரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து அல்லது சிலி போன்ற நாடுகளில் வசிப்பவராக இருந்தால் சில விஷயங்கள் முற்றிலும் மாறானதாக இருக்கும்.


பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலில் சில கேள்விகள்.
எந்த நாட்டில் குழந்தைகள் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது பள்ளிக்கு குறைவான காலத்தையே செலவிடுகிறார்கள்?
எந்த நாட்டின் குடும்பத்தினர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர்?
எந்த நாட்டில் ஒருவர் கல்விக்காக தனது வாழ்க்கையில் சராசரியாக 23 வருடங்கள் செலவிடுகிறார் ?
உலகம் முழுவதும் கல்வி முறையில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் குறித்த விவரங்கள் இதோ.
27.5 பில்லியன் டாலருக்கு உங்களால் எவ்வளவு பேப்பர் மற்றும் பசை வாங்க முடியும்?
அமெரிக்காவில் சராசரியாக ஒரு குடும்பமானது, குழந்தையின் மழலை கல்வி முதல் மேல்நிலை கல்விப்படிப்பு வரைக்கும் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய உபகரணுங்களுக்காக சராசரியாக 685 டாலர்கள் செலவிடுகிறது. 2005-ல் சுமார் 250 டாலராக இருந்த செலவுத்தொகை இப்போது அதிகரித்துள்ளது. 2018 கல்வியாண்டுக்கு மட்டும் அமெரிக்காவில் சுமார் 27.5 பில்லியன் டாலர் இப்பொருட்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.


பல்கலைகழக படிப்புக்கு ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டால் அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான செலவு 83பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 5.88லட்சம் கோடி ரூபாய். அதிகம் செலவாவது கணினிக்குதான். சராசரியாக ஒவ்வொரு வீடும் சுமார் 299 டாலர் இதற்கு செலவிடுகிறது.
இதற்கு அடுத்தபடியாக துணி மணி செலவுகள் (286 டாலர்), வரைபட்டிகை மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றுக்கு 271 டாலர்கள் செலவிடப்படுகிறது. புத்தகம், பைண்டிங் செலவு உள்பட மற்ற செலவுகளுக்கு சராசரியாக 112 டாலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செலவு மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ரஷ்யாவில் பள்ளி நேரம் எவ்வளவு?
33 வளர்ந்த நாடுகளில், ரஷ்யாவில் தான் ஆரம்ப பள்ளி மாணவர்கள் ஒரு வருடத்துக்கு மிகக்குறைவான நேரமே பள்ளியில் செலவிடுகின்றனர்.

சர்வதேச அளவில் ஒரு பள்ளி மாணவர் வருடத்திற்கு 800 மணி நேரம் செலவிடும் நிலையில், ரஷ்யாவில் ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் 500 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர்.
அதாவது எட்டு மாத கால கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையேயான இடைவேளையோடு சேர்த்து ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். ஆனால் ரஷ்யாவில் கல்வியறிவு விகிதம் கிட்டத்தட்ட 100% என்பதை நினைவில் வையுங்கள்.


பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டென்மார்க்குக்கு வருவோம். இங்கே ஆரம்பபள்ளி மாணவர்கள் ஒரு வருடத்திற்கு 1000 மணி நேரம் செலவிடுகின்றனர். ரஷ்யாவை விட இரண்டு மாதம் அதிகம் செலவிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளிலும் அதிக நேரம் பள்ளி வகுப்பில் இருக்கின்றனர். கல்வியில் டென்மார்க் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. நீண்ட கல்வியாண்டின் மூலம் சில பலன்கள் இருப்பதை டென்மார்க் உணர்த்துகிறது.



மலிவான விலையில் கல்வி கற்க வேண்டுமா? ஹாங்காங் பக்கம் போறீங்களா?
வீட்டில் இருந்து பள்ளி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை பொருத்து மொத்த செலவுகளில் சராசரியாக ஒரு லட்சம் டாலர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பள்ளி வகுப்பு கட்டணம், புத்தக செலவு, போக்குவரத்து செலவு, ஆரம்ப கல்வி முதல் இளங்கலை கல்வி வரையிலான தங்குமிட செலவு உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகிலேயே அதிகம் செலவாவது ஹாங்காங் பள்ளிகளில்தான். அரசின் உதவி, கல்வி கடன், உதவித்தொகை இவற்றுக்கெல்லாம் அப்பால் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்கு தங்கள் கையில் இருந்து சராசரியாக 1.31 லட்சம் டாலர் வரை (92 லட்சம் ரூபாய்) ஹாங்காங்கில் உள்ள பெற்றோர்கள் செலவு செய்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கே 99,000 டாலர் செலவு செய்கிறார்கள். அதற்கடுத்தபடியாக சிங்கப்பூரில் 71 ஆயிரம் டாலர் மற்றும் அமெரிக்காவில் 58 ஆயிரம் டாலர் செலவு செய்கிறார்கள். ஆனால் பிரான்சில் பெற்றோர்கள் 16 ஆயிரம் டாலர்கள் மட்டுமே குழந்தை கல்விக்கு செலவு செய்கிறார்கள்.
பெற்றோர்கள் மட்டும்தான் செலவு செய்கிறார்களா?


இது தோற்ற மெய்ம்மை(விர்ச்சுவல் ரியாலிட்டி), 3டி ப்ரின்ட்டிங், ட்ரான்கள் அதிகம் பயன்படுத்தப்படும் காலம். எனினும், உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் பென்சில் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.
பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு 400 வருடங்களான போதிலும் ஒவ்வொரு வருடமும் 15 -20 பில்லியன் பென்சில் உற்பத்தி செய்யப்படுகிறது.


பென்சில்

வடமேற்கு பசிபிக்கில் உள்ள சீடர் மரங்கள்தான் பேப்பர் தயாரிக்க பெரும்பாலும் மூல பொருளாக அமைகிறது. சீனா மற்றும் இலங்கையில் கிராஃபைட் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பென்சிலுக்காக 60,000 முதல் 80,000 மரங்கள் வெட்டப்படுகின்றன.

வாழ்வில் நான்கில் ஒரு பங்கை பள்ளியில் செலவழிக்கும் ஆஸ்திரேலிய மாணவர்கள்


पढ़ाई पर कितना खर्च

ஒரு குறிப்பிட்ட புள்ளியில், பள்ளி வாழ்க்கை முடியவேண்டும். ஆனால் நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பள்ளி வாழ்க்கை நீடிக்கிறது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் இளநிலை பட்டபடிப்புக்கான காலம்வரையிலான கட்டத்தில் சராசரியாக மாணவ மாணவிகள் வகுப்புக்குச் செல்லும் காலகட்டத்தை 'பள்ளி வாழ்நாள்' என குறிப்பிடலாம்
ஆரம்ப பள்ளி முதல் பல்கலைகழக படிப்பு வரைக்கும் சுமார் 22.9 ஆண்டுகளை செலவிடுகின்றனர் ஆஸ்திரேலிய மாணவர்கள். அதாவது ஆறு வயதில் இருந்து 28 வயது வரை கல்வி கற்கிறார்கள்.
குறைவான பள்ளி வாழ்நாள் இருப்பது நைஜீரியாவில்தான். அங்கே ஏழு வயதில்தான் ஆரம்ப கல்வி செல்கிறார்கள். நைஜீரிய மாணவர்கள் சராசரியாக 5.3 வருடங்கள் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 17 ஆண்டுகள்.
சரி இந்தியாவில் கல்விக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள்? இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரும்பட்சத்தில் உங்களது கருத்தையும் சேர்த்து பகிருங்கள்.

பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது


சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.


நேற்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை நாளை பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
சோஃபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோஃபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். "அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.

Sunday, September 02, 2018

தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களில் விரைவில் வங்கி சேவை: நிர்மலா சீதாராமன்- Post office Bank and ATM news Tamil



தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை தொடங்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.





நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் விரைவாக செய்து முடிக்க அஞ்சல் துறை வங்கி சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சாதரண மக்களும் எளிதாக அணுகக்கூடிய வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அஞ்சல் துறை வங்கி சேவையை, டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் ‘அஞ்சல் துறை வங்கி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், தமிழக அஞ்சல் துறை முதன்மைச் செயலர் சம்பந்த் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அஞ்சல் துறை வங்கி சேவை ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பயனளிக்கும் என்று தெரிவித்தார். சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் அஞ்சல் அலுவகங்கள் நாடு முழுவதும் உள்ளன என்று தெரிவித்தார்.


மேலும், அஞ்சல் அதிகாரி மீது எப்போதுமே கிராமபுற மக்களுக்கு நம்பிக்கை அதிகம். பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் வந்த போதிலும், அஞ்சல் அலுவலகங்கள் சேவை இன்றும் இன்றியமைததாக உள்ளன. 


 

வீடு தேடி வரும் வங்கி சேவை, வரப்பிரசாதம் என்று தனது உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், தபால் நிலைய கவுண்டர்கள், ஏடிஎம்கள், மொபைல் போன் பேங்கிங், ஆகியவற்றின் மூலம் இந்த சேவையை பயன்படுத்த வசதி உள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளை பேமெண்ட்ஸ் வங்கிகளில் செய்ய முடியும். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏஜெண்டாகவும் இது செயல்படும். ஏற்கனவே உள்ள 17 கோடி தபால் சேமிப்பு வங்கி கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணி மற்றும் செலவு குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Friday, August 31, 2018

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! Snake business


பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.


குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.


1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.


ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண்டுமுருகன்

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

அப்ரம்...நோ ...திட்டப்டாதுஉ..சிரிச்சுட்டு  போஸ்டை காப்பி ஷேர் ஏதோ ஒண்ணு பண்ணவேண்டியதுதான் ஓகேய்.

எனக்கு நிறைய ஜோலி இருக்கு.....
ஆன்  திஸ் டே அலப்பறைகள் 😜 😜 😜 😜 😜 😜

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்


ஒரு வேலையை தள்ளிபோடுவதா அல்லது உடனடியாக செய்து முடிப்பதா என்பது உங்களது மூளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

264 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் மூளைகளின் ஸ்கேன்களை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய துப்பு
ஒருவரது உணர்ச்சி மற்றும் ஊக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளும் மூளையிலுள்ள அமிக்டாலா என்னும் பாதாம் கொட்டை வடிவிலான பகுதி பெரியதாக உள்ளவர்களே வேலையை தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அமைப்பை பெற்றுள்ளவர்களின் அமிக்டாலாவுக்கும், மூளையின் மற்றொரு பகுதியான டொர்சல் அன்டெரியர் சிங்குலேட் கோர்டேஸுக்கும் (டிஏசிசி) இடையிலான பிணைப்பு சரியாக இருக்காததும் மற்றொரு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமிக்டாலா அளிக்கும் தகவல்களை பெறும் டிஏசிசிதான் உடல் எவ்விதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவரது உணர்ச்சி, கவனச்சிதறலை தடுப்பதன் மூலம் அந்த நபரை சரியான பாதையில் வைத்திருக்க இது உதவுகிறது.

"பெரிய அமிக்டாலாவைக் கொண்ட நபர்கள் ஒரு நடவடிக்கையின் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி அதிகம் ஆர்வமாக இருப்பதுடன், ஒரு விடயத்தை செய்வதற்கு தயங்குவதுடன், அதை கிடப்பில் போடுகிறார்கள்" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ருஹ்ர் பல்கலைக்கழக பேராசிரியர் எர்ஹன் ஜின்க்.
ஒரு வேலையை திறனுடன் உடனடியாக செய்து முடிப்பவர்களை விட, அதை தள்ளிப்போடுபவர்களின் மூளையிலுள்ள அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பு மோசமாக உள்ளதே காரணமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையை கட்டுப்படுத்துங்கள்
இதுகுறித்து கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கார்லெட்டோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டிம் பிய்ச்சில், ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக நம்புகிறார்.

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

"இந்த ஆராய்ச்சி மூளை உணர்ச்சி மையங்கள் ஒரு நபரின் சுய கட்டுப்பாட்டு திறனை எப்படி மூழ்கடிக்கிறது என்பதை காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.
முறையான தியானம் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் அமிக்டாலா அளவை குறைத்து, அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பை உறுதியாக்குவது சாத்தியமானது என்பதை இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

வேலையை தள்ளிப்போடுபவர்களுக்கான குறிப்புகள்
நம்மை நாமே ஊக்கப்படுத்தும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை காண முடியுமென்று கூறுகிறார்.
அவரது சில குறிப்புகள்:
உங்களுக்குள்ள வேலை ஒன்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடு இல்லையென்றால், அதை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யவேண்டிய விடயங்களை அப்படியே எழுதாமல், சிறுசிறு வேலைகளாக பிரித்து குறித்துக்கொள்ளுங்கள். இது வேலைகளை குழப்பமின்றி, எளிதாக மேற்கொள்வதற்கு உதவும்.


எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

உங்களது அலைபேசி/ கணினியில் வரும் அறிவிப்புகளை (நோட்டிபிகேஷன்) ரத்து செய்துவிடுவதன் மூலம் தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்க முடியும்.
"பிஸியாக" இருப்பது நாம் செய்ய தவிர்க்கும் காரியத்தை செய்வதைவிட எளிமையானது. எதற்கெடுத்தாலும் உங்களுக்கு நேரமில்லை என்று கூறுவதை விடுத்து, உங்களுக்கு இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா என்பது குறித்து சுய ஆய்வொன்றை மேற்கொள்ளுங்களேன்!


Thursday, August 30, 2018

இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? - சன்னி லியோனி பேட்டி


சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான 'கரஞ்சித் கௌரில்' வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் "ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டார்.

"இரண்டுக்கும் தைரியம் என்ற ஒற்றுமை உள்ளது" என்று சன்னி லியோனி பதிலளித்திருந்தார்.
நான் சன்னி லியோனியை மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவரிடம் உள்ள அந்த 'தைரியத்தை' அவரது நடை, முகம், பதில்களின் மூலம் காண முடிந்தது.
அப்போது அந்த இணையதள தொடருக்கான நேர்க்காணலை படம்பிடிப்பது சவாலானதாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.
"அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்விகள் மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், இதை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்ததால்தான் அந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்" என்று சன்னி லியோனி கூறினார்.


தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியாவில் இணையதளத்தில் மிகவும் தேடப்பட்ட நபராக சன்னி உள்ளார். பெரும்பாலான மக்கள் சன்னி லியோனியை பார்ப்பதற்கும், அவரை பற்றி தெரிந்துகொள்வதற்கும் விரும்பினாலும், அவரைப் பற்றிய தங்களது எண்ணத்தை மக்கள் ஏற்கனவே மனதில் வரைந்துவிட்டார்கள்.
மக்களிடையே இதுபோன்ற எண்ணம் உருவாவதற்கு தானே காரணம் என்று சன்னி நம்புகிறார்.

"என்னைப் பற்றியும், நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றியும் நான் நேர்மையாக இருக்கிறேன். ஆனால், மக்கள் என்னுடைய கடந்த காலத்தை தொடர்புப்படுத்தி மட்டுமே என்னை பார்க்கிறார்கள். மக்களிடையே அது போன்ற எண்ணம் உருவாவதற்கு நான்தான் காரணம் என்று நம்புறேன். இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பரிணமிக்கிறார்கள், அதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்."
தொடக்கத்தில் பாலிவுட் திரைப்படங்களில் "குத்தாட்டப் பாடலில்" நடித்த சன்னி, தற்போது சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனது சொந்த வாசனை திரவிய தயாரிப்பான 'தி லஸ்ட்' ஐ (இச்சை என்று பொருள் தரும் சொல்) அவர் அறிமுகப்படுத்தினார்.


வாசனை திரவிய தயாரிப்புக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அவரைப் பற்றிய கடந்தகால எண்ணத்தை மக்களிடையே மீண்டும் ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்டேன்.
அதை மறுத்த சன்னி, தனது வயதில் வாசனை திரவியத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும், தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது, இந்த பெயரையே தான் விருப்பியதாகவும் அவர் கூறினார்.
"செடுஷன் அல்லது ஃப்யர், ஐஸ் போன்ற பெயர்களைத்தான் மற்ற தயாரிப்பாளர்களும் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.
சன்னி லியோனியின் இயற்பெயர் கரஞ்சித் கௌர் ஆகும்.
ஆபாசப்பட திரையில் பணியாற்றிய சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பில் 'கௌர்' என்ற வார்த்தை இடம் பெறுவதற்கு தீவிர சீக்கிய மத அமைப்பான, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC), அது சீக்கிய மதத்தின் முக்கிய வார்த்தைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறியதுடன், எதிர்ப்பும் தெரிவித்தது.
இது குறித்து சன்னியிடம் கேட்டதற்கு, அந்த பெயரை தனது பெற்றோர்கள் சூட்டியதாகவும், இதே பெயர்தான் தனது கடவுச்சீட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

"எப்போதுமே என்னுடைய உண்மையான பெயர் கரஞ்சித் கௌர்தான். சன்னி என்ற பெயரை நான் செய்யும் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தினேன்" என்று மேலும் கூறினார்.
தான் ஆபாசப்படத் துறையில் பணியாற்றியதற்கு சன்னி லியோன் என்றுமே வெட்கப்பட்டதில்லை. மேலும், தானே விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுத்ததாக அவர் பல முறை கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் ஆபாசப்படங்களை பார்ப்பதற்கு இந்தியாவில் தடையேதும் இல்லை. ஆனால், ஆபாசமான உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கும்/ பகிர்வதற்கும் சட்டரீதியாக தடை உள்ளது.
உலகிலேயே ஆபாசப்படத்தை அதிகம் பார்ப்பவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக பிரபல ஆபாசப்பட இணையதளமான போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏன் ஆபாசப்படத் துறை அனுமதிக்கப்பட வேண்டும்?
சற்றும் யோசிக்காத சன்னி, "இதில் நான் முடிவெடுப்பதற்கு ஒன்றுமில்லை. இந்திய அரசாங்கமும், அதன் மக்களும்தான் தங்களுக்கு எது வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
ஆபாசப்படத்துறை பாலியல் உறவு சார்ந்த உரையாடல்களை இயல்பாக்க உதவுகிறதா? அமெரிக்காவில் இதுகுறித்த உங்களது அனுபவம் என்ன?
தனது தேர்வு எவர் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கூடாது என்றும், சமூகத்தின் கருத்து குடும்பங்களாலும், ஒரு பெண்ணின் கருத்து அவரை அவர்களது பெற்றோர் வளர்க்கும் விதத்தை பொறுத்தும் அமைகிறது என்றும் அவர் கூறினார்.
ஆபாசப்படத்துறையில் இணையும் சன்னியின் முடிவுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பெற்றோர் தன்னை ஒரு சுதந்திரமான பெண்ணாக வளர்த்ததனால்தான் தன்னால் சுயமாக முடிவுகளை எடுக்கமுடிந்தது என்று நம்புவதாக சன்னி லியோன் கருதுகிறார்.

தற்போது சன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாயின் மூலம் பெற்றெடுத்தார்.
உங்களது குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரம் அளிப்பீர்களா?
"கண்டிப்பாக, அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும், செவ்வாய் கிரகத்துக்கு செல்லவேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆனால், தங்களது வாழ்க்கையில் முடிவுகளையும், பயணத்தையும் அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.
எனது கடைசி கேள்வி கிட்டத்தட்ட மிகவும் சங்கடமானது. சன்னி லியோனை பற்றி கரஞ்சித் கௌர் பதில் அளிக்கும் வகையில் அந்த கேள்வி இருந்தது.

உங்களது கடந்தகால தொழிலை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்க முடியுமா?
சன்னி அந்த கேள்வியை விரும்பவில்லை. ஆனால், சிந்தனை அவரது மனதை கடந்துபோனது போல் இல்லை.
அவரது கடந்தகால வாழ்க்கை முடிவுகளின் வீழ்ச்சி மற்றும் அதன் காரணமாக மக்களின் மனதில் உருவான மனப்பான்மை, உருவம் ஆகியவற்றைக் கொண்டு அவர் வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.
ஆனால், தனது அதே தைரியத்துடன், 'என்னுடைய பொதுவான கவலைகளில் தற்போது அது இல்லை' என்று சன்னி லியோன் கூறினார். நீண்டகாலமாக தாயாவதன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தற்போது அந்த அனுபவத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார்.
மேலும், சரியான நேரம் வரும்போது, தனது வாழ்க்கையை பற்றி குழந்தைகளிடம் நேர்மையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.