வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. 5 மனைவியர் இருக்க.. 6-வது பெண்ணுடன் எஸ் ஆன முருகன்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 03, 2019

ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. 5 மனைவியர் இருக்க.. 6-வது பெண்ணுடன் எஸ் ஆன முருகன்!

ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. முருகனுக்கு 5 பொண்டாட்டிகள் இருந்தும் இன்னொரு பெண்ணுடன் எஸ்கேப் ஆகி உள்ளார்!! 

திண்டுக்கல் அருகே தென்னம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்தான் முருகன். மளிகைகடை ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கும் கள்ளிமந்தயம் பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் பழக்கமானார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நாளைடவில் ஒருத்தரையொருர் விரும்ப ஆரம்பித்து, தீவிர லவ்வாக அது மாறியது. ஆனால் ராதாவை கல்யாணம் செய்ய முருகன் வீட்டில் சம்மதிக்கவில்லை. இருந்தாலும், முருகன் வீட்டை எதிர்த்து கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு மளிகை கடை மூலம் குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார்.


மீண்டும் கர்ப்பம்

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதுடன் திரும்பவும் ராதா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். வீட்டை எதிர்த்து முருகன் கல்யாணம் செய்தாலும், எப்பவுமே ராதாவுடன் தகராறு செய்தே வந்தார். ஒருத்தருக்கொருத்தர் சின்ன விஷயத்திலும் உடன்படுவதில்லை. இதில், முருகனுக்கு கடன் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.


அலைந்து திரிந்தார் 

அதனால் சம்பவத்தன்று ராதாவிடம் சண்டை போட்ட முருகன், கடன் நிறைய உள்ளதால் எங்காவது போய் பணம் புரட்டி கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போனார். ஆனால் அப்போதிருந்தே முருகன் எஸ்கேப். எங்கே போனார் என்றே தெரியாததால், ராதா பயந்து எல்லா இடங்களிலும் தேடினார். கையில் குழந்தை, நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், முருகன் சென்று வரும் இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்தார்.


இன்னொரு பெண்

அப்போதுதான், முருகன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்கும்போது முருகன் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. அதுவும் 5 பெண்களை இதற்கு முன்பு கல்யாணம் செய்திருக்கிறார். இப்போது இன்னொரு பெண்ணுடன் லவ் ஆகி, அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு எங்கோ போய்விட்டார் என்ற தகவலை கேட்டதும் ராதா நிலைகுலைந்து போனார்.


மளிகை கடை அபகரிப்பு  

அதனால் முருகனின் அம்மா வீட்டில் நியாயம் கேட்க செல்லலாம் என்றால், முருகன் நடத்தி வந்த கடையையும், வீட்டையையும் அவர்களே பிடுங்கி கொண்டுள்ளார்கள். ராதாவை ஏற்கனவே அவர்களுக்கு பிடிக்காது என்பதால் இப்போது வீட்டில் சேர்க்க மறுக்கிறார்கள்.


கோயில் மண்டபம் 

இதனால், கட்டிய கணவனும் ஓடிப்போய், கையில் குழந்தை, வயிற்றில் குழந்தையுடன் வீடு வாசல் எதுவும் இல்லாமல் ஒரு கோயில், குளம், மண்டபம் என தங்கி வருகிறார் ராதா. கடைசியில் வேறு வழி இல்லாமல், வடமதுரை போலீசில் இது சம்பந்தமாக ஒரு புகாரையும் அளித்திருக்கிறார்.

No comments:

Post a Comment