வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 21, 2019

என் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்..

ஓவராக குடித்து விட்டு ஆட்டம் போட்ட மகனை விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்து கொன்றுள்ளார் பெற்ற தாய் மாரியம்மாள். 




இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

40 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உண்டு. ஆனால் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுதான் இவரது தினசரி பொழப்பே. இதனால் இவரது தொல்லை தாங்காமல் செய்து வந்த அட்டூழியங்களை அனைவரும் பொறுத்து கொண்டு வந்தனர்.


2 குழந்தைகள் 

ஒரு கட்டத்தில் கருப்பையனிடம் அடி தாங்க முடியாத மனைவி தன் குழந்தைகளை மாமியாரிடமே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு போய்விட்டார். இதனால் 2 குழந்தைகளையும் மாரியம்மாள்தான் கவனித்து வந்தார்.


விறகு கட்டை

இந்நிலையில் நேற்று ராத்திரியும் ஃபுல் போதையில் கருப்பையன் வீட்டிற்குள் நுழைந்து வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். பிறகு மாரியம்மாளை அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மாள் பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து கருப்பையனை சரமாரியாக விளாசினார்.


உயிரிழந்தார் 

இவ்வளவு நாள் இருந்த ஆத்திரத்தை எல்லாம் விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


சரணடைந்தார்  

இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். "என் மகனை அடித்தே கொன்றுவிட்டேன்" என்று சொல்லி சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையா உடலை கைப்பற்றி தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment