வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest Murdar News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest Murdar News. Show all posts
Showing posts with label Latest Murdar News. Show all posts

Saturday, June 08, 2019

வாங்குன கடன திருப்பித் தரலைங்க, அதான் அவன் பொண்ண கொன்னுட்டேன்! அரண்டு போன அலிகார்..!

பீஃப் சாப்பிட்டாலோ அல்லது பீஃப் என்கிற பெயரை உச்சரித்தால் கூட "போட்றா அவன" என ஹிந்துத்வ தீவிரவாதிகள் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், பீஃப் சாப்பிட்டார்கள் என்பதற்காக இறந்த முகம்மது அக்லஃப் இறந்த அதே மாநிலத்தில் தற்போது இன்னொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.


 பூட்டுகளுக்கு பெயர் போன அலிகார் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, தப்பல் (Tappal) கிராமத்தில் அந்தக் கொடூரம் கோரமாக நடந்திருக்கிறது. வாங்கிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என, கடன் வாங்கியவரின் 2.5 வயது குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள் கடன் கொடுத்த காட்டு மிராண்டிகள்.

என்ன பிரச்னை 
 ஒரு அழகிய குடும்பம். அந்த குடும்பத்துக்கு மேலும் அழகு சேர்க்க ஒரு குட்டி இளவரசியாக ஒரு 2.5 வயது பெண் குழந்தை. மிக அளவான சம்பாத்தியம், சின்ன வேலை, செல்லக் குழந்தை என சிறிய உலகத்தில் வாழும் குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு அவசர தேவைக்காக பக்கத்து வீட்டுக் காரர்களான சஹித் மற்றும் அஸ்லாமிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

அப்புறம் தருகிறேன் 
 சரி ஏதோ அவசரத்தில் கேட்கிறார்கள் என்பதால் சஹித்தும் அஸ்லமும் எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள் எனக் கேட்காமலேயே கடனைக் கொடுத்துவிட்டார்கள். 

 சில வாரங்கள் கழிந்து விட்டது. "என்னய்யா வாங்குன 10,000 ரூபாய் கடன எப்பய்யா தருவே" என சஹித்தும் அஸ்லாமும் வேறு தொனியில் கேட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய குடும்பமும் விரைவில் கொடுத்து விடுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


கொடுக்கவில்லை
இன்னும் சில வாரங்கள் கழிந்துவிட்டது. இந்த முறை இன்னும் கோபத்துடனும், மரியாதை குறைவாகவும், “ஏய்யா கடன் வாங்குறப்ப நல்லா இருந்துச்சுல்ல, இப்ப கடன எப்ப குடுப்ப” என மிரட்டல் தொனிலேயே கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் போகட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என நம் அப்பாவிக் குடும்பம் வழக்கம் போல பதில் சொல்லி இருக்கிறது.

அடிதடி
ஒரு நாள் மீண்டும் சஹித்தும் அஸ்லமும் வெளிப்படையாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லை உன் குழந்தையை தூக்கட்டுமா எனவும் மிரட்டி இருக்கிறார்கள். பயந்து போன அந்த ஏழைக் குடும்பம், காலில் விழாத குறையாக அடித்துப் பிடித்து சஹித்துக்கும், அஸ்லாமுக்கும் பல விதங்களில் சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

கோபம் 
 ஆனால் சஹித்துக்கும் அஸ்லாமுக்கும் கோபம் தாளவில்லை. ஏற்கனவே அந்த அப்பாவிக் குடும்பத்தில் மிரட்டியது போலவே, மே 31, 2019 அன்று குழந்தையைக் கடத்தி இருக்கிறார்கள். கடத்திய குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றே விட்டார்கள்.

 கோபம் அடங்காமல் கண்களையும் நோண்டி எடுத்திருப்பதாகச் சில செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் பின் தான் அவர்கள் செய்தது கொலை என்கிற பெரிய தவறு அவர்களுக்குப் புரிய வருகிறது.

அடையாளம் தெரியக் கூடாது 
 ஆக தவறை மறைக்க அந்த 2.5 வயது பிஞ்சுக் குழந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு கண்டம் துண்டமாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்கள்.

 குழந்தையின் உடல் அங்கங்களை தெரு நாய்கள் வாயில் கவ்விக் கொண்டு எடுத்துச் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகப்பட்டு குப்பைத் தொட்டியைத் தோண்டித் துருவி இருக்கிறார்கள். குழந்தையின் சடலம் கடந்த ஜூன் 02, 2019 அன்று தான் கிடைக்கிறது.

காவல் துறை 
 விசாரணையில் கடன் பிரச்னை தெரிய வர சஹித் மற்றும் அஸ்லாமை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்படி விசாரணைகளை நடத்தி வருவதாக அலிகார் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறதாம்.

உண்ணாவிரதம் 
 தன் 2.5 வயது மகளின் மரணச் செய்தி கேட்ட தகப்பன் “சஹீத் மற்றும் அஸ்லாமின் மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த இருவரால் மட்டும் என் குழந்தையைக் கொன்று இருக்க முடியாது.

 அப்படி கைது செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” எனச் சொல்லிகாவல் துறைக்கு பகீர் கிளப்பி இருக்கிறார்.

நடவடிக்கை
மேற்படி எந்த பிரச்னையும் நடக்காமல் இருக்க, 2.5 வயது மகளைப் பறி கொடுத்த குடும்பத்தினருக்கும், தப்பல் கிராமம் சுற்றிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 இதை ஒரு முன்னேற்பாடாக காவல் துறையினர் செய்திருப்பதாகவும் அலிகார் மாவட்டத்தின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் சொய்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்களில் இருந்து சொல்கிறார்கள்.

இந்து - முஸ்லிம் 
 செய்திகள் ஒரு பக்கம் இப்படி வந்து கொண்டிருக்க, இறந்த 2.5 வயது செல்ல மகளின் பெயர் ட்விங்கில் ஷர்மா என்றும், அந்தச் சிறுமியை முகம்மது சஹித் பாலியல் வன் கொடுமைக்கு ஆள் ஆக்கி கொலை செய்துவிட்டான் என்றும் பல ட்விட்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது வரை இறந்த 2.5 வயது மகளின் பெயர், அவர்களின் பெற்றோர் விவரங்களை அலிகார் காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 29, 2019

மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 மருத்துவர்கள் கைது

மகராஷ்டிர மாநிலம் மும்பையில், அம்மாநில அரசால் நடத்தப்பட்டு  வரும் மருத்துவமனையில் தங்கி, பாயல் சல்மான் தட்வி 26, என்ற பெண் மருத்துவர், பெண்கள் நல மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

 இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதியன்று பாயல் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பாயலின் தாயார் கூறும்போது, பாயலை அவரது சீனியர்கள் தொடர்ச்சியாக சாதியைக் கூறி அவமானப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் பாயலை தொடர்ச்சியாக சாதிக்கொடுமைக்கு உட்படுத்தி அவர் தற்கொலை செய்ய 3 சீனியர் மருத்துவர்கள் காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.
 குற்றச்சாட்டையடுத்து, மருத்துவர்கள் 3 பேரும் தலைமறைவாகினர். இதனிடையே, மகாராஷ்டிரா மருத்துவர்கள் அசோசியேஷன், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமா ஆகுஜா, பாக்டி மேகார் மற்றும் அங்கிதா காண்டில்வால் ஆகிய மூன்று மருத்துவர்களின் உறுப்பினர் உரிமையையும் ரத்து செய்தது. 
இதற்கு மத்தியில் பாக்டி மேகார் நேற்று, கைது செய்யப்பட்டார். அவரிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தலைமறைவான மேலும் 2 மருத்துவர்களான ஹேமா ஆகுஜா, அங்கிதா காண்டில்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 குற்றச்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கு எதிராக, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Saturday, March 30, 2019

கணவனை பிடிக்காமல் தாய்வீட்டிற்கு வந்த இளம்பெண்!! அக்கா என்று கூட பாராமல் தம்பி செய்த காரியத்தை பாருங்க....!



நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சார்ந்தவர் மணிவண்ணன். பொறியியல் படித்த மகளும், பாலிடெக்னிக் படிக்கும் மகனும் இருந்துள்ளனர். மணிவண்ணனின் மகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஏர்வாடி பகுதியை சார்ந்த லெனின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.


இந்தநிலையில், திருமணம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே கணவர் பிடிக்கவில்லை என்று தந்தை வீட்டிற்கு திருப்பியுள்ளார்  மணிவண்ணனின் மகள். அவர் வீட்டுக்கு வந்த மறுதினம் அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த  மணிவண்ணனின் மகளை அவரது சகோதரன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான்.


கொலைசெய்துவிட்டு மணிவண்ணனின் மகன் சுந்தரபாண்டியன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். காவல்நிலையத்திற்கு அரிவாளுடன் வந்த சுந்தரபாண்டியை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர். மேலும் அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், தனது அக்காவிற்கு கடந்த மாதம் தான் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அவரின் கணவரான லெனின் லாரி ஓட்டுநர் என்பதை அறிந்தே திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறினார். மீண்டும் அவரிடம் பேசி கணவருடன் சேர்த்து வைத்த 10 நாட்களில் மீண்டும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று வீட்டிற்கு வந்துவிட்டார்.


எனது அக்கா அவரு செய்ததால் எண்களாக குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுந்தர பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Monday, January 21, 2019

என் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்..

ஓவராக குடித்து விட்டு ஆட்டம் போட்ட மகனை விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்து கொன்றுள்ளார் பெற்ற தாய் மாரியம்மாள். 




இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

40 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உண்டு. ஆனால் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுதான் இவரது தினசரி பொழப்பே. இதனால் இவரது தொல்லை தாங்காமல் செய்து வந்த அட்டூழியங்களை அனைவரும் பொறுத்து கொண்டு வந்தனர்.


2 குழந்தைகள் 

ஒரு கட்டத்தில் கருப்பையனிடம் அடி தாங்க முடியாத மனைவி தன் குழந்தைகளை மாமியாரிடமே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு போய்விட்டார். இதனால் 2 குழந்தைகளையும் மாரியம்மாள்தான் கவனித்து வந்தார்.


விறகு கட்டை

இந்நிலையில் நேற்று ராத்திரியும் ஃபுல் போதையில் கருப்பையன் வீட்டிற்குள் நுழைந்து வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். பிறகு மாரியம்மாளை அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மாள் பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து கருப்பையனை சரமாரியாக விளாசினார்.


உயிரிழந்தார் 

இவ்வளவு நாள் இருந்த ஆத்திரத்தை எல்லாம் விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


சரணடைந்தார்  

இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். "என் மகனை அடித்தே கொன்றுவிட்டேன்" என்று சொல்லி சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையா உடலை கைப்பற்றி தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

Thursday, January 03, 2019

புது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்

புத்தாண்டு தினத்தை கள்ளக்காதலனுடன் கொண்டாடியதால் மனைவியை அடித்து கொன்றதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

கோவில்பட்டி நடராஜபுரம் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (28). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி விமலா (20). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

விமலாவுக்கும் அதே பகுதியைச் சேர்நத வெல்டிங் பட்டறை தொழிலாளி குமாருக்கும் (20) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மாரிமுத்துவின் காதுகளை எட்டியது. இதையடுத்து விமலாவிடம் நல்லவிதமாக மாரிமுத்து புரிய வைத்து புத்தாண்டு முதல் அனைத்தையும் மறந்து நாம் புது வாழ்க்கை வாழ்வோம் என கூறியுள்ளார். இதற்கு விமலாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.


உல்லாசம்

இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு மாரிமுத்து- விமலா தம்பதி குடித்தனம் வந்துள்ளனர். ஆனால் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு விமலா, குமாருடன் பழைய வீட்டுக்கு சென்று அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த கணவர் மாரிமுத்து விமலாவை அடித்து கொன்றுவிட்டார்.


பரபரப்பு 

இதையடுத்து அவரை கோவில்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், குமாருடன் விமலா பல முறை உறவு கொண்டுள்ளார். இதெல்லாம் மறந்துவிட்டு குழந்தைகளின் நலனுக்காக பொறுத்துக் கொண்டு அவருக்கு புத்திமதி சொன்னேன்.


உல்லாசம்  

ஆனால் அவர் கேட்கவில்லை. புதிய வீட்டுக்கு வந்த பிறகு புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் விமலாவை காணாது அதிர்ச்சி அடைந்தேன். அப்போது தேடி பார்த்தபோது விமலா பழைய வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. நேராக அங்கு போனேன். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர்.


தலைமறைவு  

இதனால் ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் இருவரையும் ஓங்கி அடித்தேன். இதில் விமலா உயிரிழந்துவிட்டார். குமார் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நான் போலீஸில் சரணடைந்துவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மாரிமுத்துவை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.