பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் ஆங்காங்கு கிடந்துள்ளது. இதனை கண்ட விடுதி பெண் வார்டன்கள் இருவர் கோபமடைந்து இதுகுறித்து மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் மாணவிகள் பயந்துகொண்டு யாரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனை தொடரண்டு நாப்கின்களை பயன்படுத்தி தூக்கி வீசியது யார் என கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து கண்டறிய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பெண் பாதுகாவலர்கள் கொண்டு 12 மாணவிகளின் ஆடைகளை களைந்து அவர்களை சோதனை செய்தனர்.
இதனால் மாணவிகள் கூனி குறுகி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானர். பின்னர் இதுகுறித்து அனைத்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கொடுத்த புகார்கள் பொருட்படுத்தாமல் பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க்காமலும் இருந்துள்ளனர்.
ஆனால் மாணவிகள் பயந்துகொண்டு யாரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனை தொடரண்டு நாப்கின்களை பயன்படுத்தி தூக்கி வீசியது யார் என கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து கண்டறிய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பெண் பாதுகாவலர்கள் கொண்டு 12 மாணவிகளின் ஆடைகளை களைந்து அவர்களை சோதனை செய்தனர்.
இதனால் மாணவிகள் கூனி குறுகி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானர். பின்னர் இதுகுறித்து அனைத்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கொடுத்த புகார்கள் பொருட்படுத்தாமல் பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க்காமலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்திய பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளின் ஆடையை களைந்து அநாகரீகமாக நடந்துகொண்ட 2 பெண் வார்டன்கள் மற்றும் 2 பெண் பாதுகாவலர்களை நீக்கம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment