வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சற்றுமுன் | அச்சிறுப்பாக்கத்தில் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 06, 2019

சற்றுமுன் | அச்சிறுப்பாக்கத்தில் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது சென்னை நோக்கி வந்த கார் பின்புறம் சக்கரம் வெடித்ததில் தலைகீழாக பல்டி அடித்தது.



இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டது.


கார் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால் தடுப்புச் சுவரின் மீது மோதி பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கி இருக்கும்.


இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



No comments:

Post a Comment