வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண் குளிப்பதை பேனா கேமரா மூலம் படம் பிடித்து.. 55 வயதில் சிக்கிய அறநிலையத்துறை இணை ஆணையர்! | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, July 05, 2019

பெண் குளிப்பதை பேனா கேமரா மூலம் படம் பிடித்து.. 55 வயதில் சிக்கிய அறநிலையத்துறை இணை ஆணையர்! | Run World Media

பெண் குளிக்கிறதை கேமரா மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார் மிஸ்டர் பச்சையப்பன்.. வயசு 55.. செய்யும் தொழில் இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்! யாரா இருந்தால் என்ன, கேடு கெட்ட செயலை செய்ததால் பச்சையப்பனை தூக்கி உள்ளே வைத்துவிட்டது போலீஸ்! மதுரை, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த பச்சையப்பன்.


இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். கடந்த ஜுன் 28ம் தேதி, சதுரகிரி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் அங்கு பணி நிமித்தமாக சென்றார்.


பேனா 
 அப்போது கோயில் பகுதியில் உள்ள பாத்ரூமில் அந்த பெண் அதிகாரி குளிக்க சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூமில் ஆணியில் ஒரு பேன்ட் தொங்கி இருந்திருக்கிறது. அந்த பேன்ட்டில் சொருகி இருந்த ஒரு பேனா ரெட் கலரில் எரிந்திருக்கிறது.




குளியல் காட்சிகள்
 இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பேனாவை எடுத்து பார்த்தால், அது பேனா இல்லை, பென் கேமரா என்பதும், அவ்வளவு நேரமாக குளித்த காட்சி எல்லாம் அதற்குள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதைவிர வேறு சில ஆபாச வீடியோவும் அதில் இருந்ததாம்.


அது மட்டுமில்லை.. அந்த பேன்ட் பச்சையப்பனுடையது என்றும் தெரியவந்தது. உடனடியாக சாப்டூர் போலீசிலேயே பெண் புகார் தந்தார். போலீசாரும் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.




காஸ்ட்லி காமிரா 
இந்நிலையில், விடிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்து எஸ்பி ஆபீசில் வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அந்த பென் கேமரா.. ரொம்ப காஸ்ட்லியாம். அதில் எது ரெக்கார்ட் ஆனாலும், செல்போனில் லைவ்-ஆக பார்க்க முடியுமாம். இதையெல்லாம் கேள்விப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சியில் உள்ளது.




தீவிர விசாரணை 
 கைதான பச்சையப்பன் சாதாரண ஆள் கிடையாது. சவுடார்பட்டியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தலில் தொடர்பு உள்ளவராம்.


 இதே சதுரகிரி கோயில் உண்டியல் வருமானத்தை எண்ணும்போது பணத்தில் கையாடலும் செய்துள்ளாராம். போன வருஷம் தன் பிறந்த நாளுக்கு அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவழைத்து காஸ்ட்லி கிப்ட் கேட்டும் வாங்கி இருக்கிறாராம். இவ்வளவு ஆட்டம் போட்ட பச்சையப்பன் இன்று களி தின்று, கம்பி எண்ண போகிறார்!




No comments:

Post a Comment