வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 02, 2019

ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!

சுடிதார் அணிந்த இந்த இரு இளம்பெண்களை பார்க்கவே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள்.. இவர்களா இந்த காரியத்தை எல்லாம் செய்தது என்று நினைத்தால் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

 சென்னை ஆழ்வார்பேட்டையில் பீமண்ணா கார்டன் பகுதியில் 2 இளம் பெண்கள் இன்று சுற்றி திரிந்துள்ளனர். ஒருவர் மஞ்சள் கலர் சுடிதார், இன்னொருவர் ரெட் கலர் சுடிதாரில் இங்குள்ள கடைப்பகுதிக்கு வந்துள்ளனர்.



அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்களிடம் நகைகளை பறிப்பதும், பணத்தை கொள்ளையடிப்பதுமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, இளைஞர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, அந்த பணத்தை பறித்து கொண்டு இந்த இளம்பெண்கள் ஓடியதாக தெரிகிறது.


இதனால் கூச்சலிட்ட அந்த இளைஞர், பெண்களை விரட்டி சென்றுள்ளார். பொதுமக்களும் சேர்ந்து 2 பெண்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்த பர்ஸை வாங்கி பார்த்ததில், ஏகப்பட்ட நகைகள் இருந்திருக்கின்றன.


 மேலும் பர்ஸில் 25 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த பணத்தையும் வைத்திருந்தது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் மொத்தமாக சேர்ந்து இரு பெண்களையும் தாறுமாறாக கேள்வி கேட்டு விசாரித்தனர். அந்த பெண்கள் குழந்தையின் வெள்ளிக்கொலுசைகூட விட்டு வைக்கவில்லை.


இவர்களிடமிருந்து 40 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்கள் பறிமுதல் செய்தனர். இந்த பெண்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை என்பதால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது.




No comments:

Post a Comment