வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர் அஜித்குமார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 01, 2019

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர் அஜித்குமார்


மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் நடிகர் அஜித்குமார்.






கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில் கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.


கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் 314 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.


No comments:

Post a Comment