வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவியின் சடலத்தோடு 1 மணிநேரம் தூங்கிய மாநகராட்சி ஊழியர்! -சென்னை தம்பதி எடுத்த விபரீத முடிவு - Chennai Madhavaram subside news latest
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 15, 2019

மனைவியின் சடலத்தோடு 1 மணிநேரம் தூங்கிய மாநகராட்சி ஊழியர்! -சென்னை தம்பதி எடுத்த விபரீத முடிவு - Chennai Madhavaram subside news latest

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (24). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரஞ்சனி (எ) சரண்யா (20). இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. 

ஆனால், குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில், ரஞ்சித் வீட்டின் கதவு நேற்று காலை நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். ஆனால், திறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது படுக்கையறையில் ரஞ்சித்தும் சரண்யாவும் படுத்திருந்தனர்.


அவர்களை சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பார்த்தும் இருவரிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
 தற்கொலை
இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் சரண்யா சடலமாகக் கிடந்தார். அவரின் கழுத்தில் காயங்கள் இருந்தன. மேலும், படுக்கையறையில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. 

ரஞ்சித், மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அவரை மீட்ட போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சரண்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, சரண்யாவின் சடலத்தை போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி கலந்த சோகமான தகவல்கள் வெளியாகின.
 ரஞ்சித்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரஞ்சித், ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இவரின் உறவினர்தான் சரண்யா. சரண்யாவின் அம்மா வீடு, பூச்சி அத்திபேடு, புதுகுப்பம் கிராமத்தில் உள்ளது. 

இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் ரஞ்சித் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சரண்யா, தற்கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 13-ம் தேதி இரவு வழக்கம்போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

14-ம் தேதி காலையில் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியில் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் சரண்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்குத் திரும்பிவந்த ரஞ்சித், மனைவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மனைவியின் சடலத்தை கீழேக் இறக்கினார். அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்றார். 

மதுபானம் வாங்கிவந்த அவர், வீட்டிலிருந்த டீசலை அதில் கலந்தார். அதனைக் குடித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் ரஞ்சித் மயங்கிவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி ரஞ்சித்தை மீட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

No comments:

Post a Comment