வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Chennai district news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chennai district news. Show all posts
Showing posts with label Chennai district news. Show all posts

Monday, June 05, 2023

சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..!

சென்னையில் இளம்பெண் ஒருவருடன் பழகி திருமணம் ஆசை காட்டி மோசடி செய்த மருத்துவர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எண்ணூரைச் சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சென்ற போது இளம்பெண்ணுக்கு அந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளாடைவில் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர்.


தொடர்ச்சியாக இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங், வீடியோ கால், வெளியே லாங் டிரைவ் சென்று வந்த நிலையில் இந்த உறவு காதலாக மாறியுள்ளது. அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி மொழி கொடுத்த மருத்துவர் நெருக்கமாக இருக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக பெண்ணிடம் பேசுவதை அந்த மருத்துவர் திடீரென நிறுத்திய நிலையில் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் பெண் விசாரித்ததில் அந்த மருத்துவர் உறவை தொடர நாட்டம் காட்டவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவருக்கு தொடர்ந்து அழுத்தம் தந்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் உள்ளன, அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என பிளாக்மெயில் செய்துள்ளார்.

விவகாரம் எல்லை மீறி போகவே அந்த பெண் தனது பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் ஆதராமாக தந்துள்ளார்.

தன்மீது பழிவந்துவிடக் கூடாது என போலீஸ் விசாரணையை முடக்க மருத்துவர் முயற்சிப்பதாகவும், அதற்காக இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகவும் பெண்ணின் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் புகாரை தொடர்ந்து மருத்துவர் மீது மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


சென்னை மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 08, 2022

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?

சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


முந்தைய சென்னை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

5 வாலிபர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த பிளஸ்-1 வகுப்பு மாணவிகள்.!! பகீர் சம்பவம்..!

சென்னையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்து போனார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்யவே போலீசாரும் தங்கள் புலன் விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.


அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

தகவலை அறிந்ததும் அந்த மாணவிகளின் குடும்பமே உடைந்து நொறுங்கி போய் கண்ணீர் வடிக்கிறது. அந்த மாணவிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அனகாபுத்தூர் பகுதியில் பிளஸ்-1 படிக்கும் 5 மாணவிகள் தோழிகள். இவர்கள்அனைவரும் ‘டிக்-டாக்’ ரசிகைகள். தினமும் வித்தியாசமாக வீடியோ பதிவு செய்து அதை ‘ஷேர்ஷாட்’ மூலம் வலைத்தளத்தில் வலம் வர பதிவேற்றுவது வழக்கம்.

இவர்களுடைய பதிவுகளை பார்த்து பலர் ‘லைக்’ செய்துள்ளனர். இதனால் உற்சாகம் அடைந்த மாணவிகள் புது புது வீடியோக்களை ஆர்வத்துடன் பதிவேற்றினார்கள். ஆனால் வெளி உலகில் ரசிப்பவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள். தங்களை ருசிக்க விரும்புபவர்களும் இருப்பார்கள் என்பதை அறியா பருவத்தில் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த டிக்-டாக் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த சுரேன் என்கிற அப்பு (23). பழக்கமாகி இருக்கிறார். அந்த மாணவிகளின் வீடியோ பதிவுகளை புகழ்ந்து தள்ளியவன் எண்ணூர் பக்கம் வாருங்கள். கடல் அழகுடன் வீடியோ எடுத்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும்’ என்று அளந்து விட்டுள்ளான். டிக்-டாக் மோகத்தால் பின்விளைவை பற்றி யோசிக்காமல் 5 பேரும் எண்ணூருக்கு சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் வருகைக்காக காத்திருந்த அப்பு அவர்களை வரவேற்று அன்பாக பேசி இருக்கிறார்.

மாணவிகளும் அவரை ‘டிக்-டாக்’ ரசிகராக நினைத்து கொண்டார்கள். எண்ணூரில் பல இடங்களில் வீடியோ எடுத்துள்ளார்கள். அதையும் பதிவேற்றம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒரு மாணவியின் செல்போனை நைசாக எடுத்து வைத்துக் கொண்டார் அப்பு. எல்லோரும் விடை பெற்று வீடு திரும்பினார்கள். மாலையில் செல்போனில் தொடர்பு கொண்ட அப்பு ஒரு போனை விட்டு சென்று விட்டீர்கள் என்று கூறி இருக்கிறார்.

அதை கேட்டதும் ‘தொலைந்து விட்டதாக நினைத்தோம்’ என்ற அந்த மாணவி யாராவது ஒருவர் நேரில் வந்து போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்துள்ளார். அதன் பேரில் துணைக்கு இன்னொரு மாணவியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சென்ட்ரல் வந்துள்ளார்கள். அங்கு காத்திருந்த அப்பு அவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு இரவாகி விட்டதே வாருங்கள் ‘டின்னர்’ சாப்பிட்டு போகலாம் என்று அழைத்துள்ளார்.

அந்த மாணவிகளும் அப்பாவித்தனமாக பாசத்துடன் அழைக்கிறார் என்று நினைத்து சாப்பிட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். உயர்தர ஓட்டலுக்கு அழைத்து சென்று விதவிதமாக உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். மாணவிகளும் அதை ருசித்து சாப்பிட்டுள்ளார்கள். நேரம் போவதே அவர்களுக்கு தெரியவில்லை. அதற்குள் அப்பு தனது நண்பர்களையும் அழைத்துள்ளார். ஜெரால்டு (18), சஞ்சய் (19), வினித் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளார்கள். அவர்கள் தனது நண்பர்கள் என்று அப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து நேரத்தை பார்க்கும் போது தான் இனி பஸ் பிடித்து செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

அவர்களிடம் ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. கவலைப்படாதீர்கள். பக்கத்தில் தெரிந்த லாட்ஜ் இருக்கிறது. எங்களோடு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். தயங்கிய அந்த மாணவிகளும் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். லாட்ஜில் இரண்டு அறை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்க வைத்து விட்டு 5 பேரும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார்கள். முதல் நாள் இரவு முடிந்த பிறகும் மறுநாளும் அவர்களின் அன்பு கட்டளைப்படி அங்கேயே தங்க சம்மதித்து இருக்கிறார்கள்.

அதற்குள் பெற்றோர் புகாரால் போலீஸ் தேட தொடங்கியது. மாணவியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அது போலீசாரை சம்பந்தப்பட்ட லாட்ஜில் கொண்டு விட்டது. அங்கு போலீசார் சோதனையிட்ட போது அவர்கள் சிக்கி இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அந்த மாணவிகளிடம் அந்த வாலிபர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா? என்று கேட்ட போது இல்லை என்று மறுத்துவிட்டனர். மாணவிகள் பயந்து சொல்ல மறுக்கலாம் என்பதால் பெற்றோர்கள் மூலம் உண்மையை கேட்க சொல்லி இருக்கிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 04, 2022

சென்னை அண்ணாசாலையில் திடீரென இறங்கி நடந்துச் சென்று முகக்கவசம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


இந்த நிலையில், சென்னை அண்ணாசாலைக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திடீரென வாகனத்திலிருந்து இறங்கி, அண்ணசாலையில் மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா? கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை நேரில் ஆய்வு செய்தார். 


அண்ணாசாலையின் முக்கிய கடைப்பகுதியில் நடந்து சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முகக்கவசம் அணியாமல் வந்த மக்களை ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, தனது கையிலிருந்த முகக்கவசங்களை வழங்கினார்.

கடைகளிலும், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


முந்தைய சென்னை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்