வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலைவாய்ப்பு] தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை! Children Protection Assistant Job Dharmapuri District
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 18, 2019

[வேலைவாய்ப்பு] தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை! Children Protection Assistant Job Dharmapuri District

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் (Child Protection Unit) இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 12 ஆம் தேதி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தற்காலிக பணியாகும். 1 வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும். 

எனவே, தற்காலிக பணி என்று பாராமல், அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்குவதில் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. அதிகபட்சமாக விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

 
மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனை பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சம்ர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.


இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Dharmapuri Child Welfare Recruitment 2019


No comments:

Post a Comment