வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கவலைய விடுங்க.. சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் இனி வாக்களிக்கலாம்! Voter at anywhere... Indian Elections
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, February 18, 2020

கவலைய விடுங்க.. சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் இனி வாக்களிக்கலாம்! Voter at anywhere... Indian Elections


இனி நீங்கள் சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்!
 தேர்தலின் போது நீங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் இருப்பதால் வாக்களிக்க வீட்டிற்கு வர முடியவில்லையா? இதற்கு தீர்வு வந்துவிட்டது.


சென்னை ஐஐடி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் சேர்ந்து  புதிய தொழில்நுட்பத்துடன் இந்த பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந்த தொழில்நுட்பப்படி நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இனி உங்கள் தொகுதிக்கு வாக்களிக்க முடியாது.  
பிளாக் செயின் சிஸ்டம் மூலம் புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுடைய வாக்குச்சாவடிக்கு  செல்லாமலே, வாக்கு செலுத்தலாம்.

கடந்த பொதுத் தேர்தலில் 30 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களிக்க முடியவில்லை. இதில் பலர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வரமுடியவில்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்திய தேர்தல் ஆணையம் சென்னை ..டி.யுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளது.  
இந்த திட்டம் தற்போது ஆராய்ச்சி வடிவில் இருப்பதால் இந்த தொழில்நுட்பம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த தொழில்நுட்பம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியிருப்பதாவது, "வெவ்வேறு பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை மாற்றுவர், ஆனால் இது தற்காலிகமாகக் குடியிருக்கும் மக்களுக்கு வாக்களிக்கக் கடினமாக இருக்கும், விரைவில் வாக்காளர் .டியுடன் ஆதார் இணைப்பதற்கான திட்டம் சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்  இனிவரும் நாட்களில், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், வாக்காளர் எந்தவொரு பகுதியில் இருந்தும் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் இந்த நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment