வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்ணின் கண்ணீரைத் துடைத்து.. தலையைத் தொட்டு ஆறுதல் கூறிய ஆளுநர்!

Pages

Tuesday, November 27, 2018

பெண்ணின் கண்ணீரைத் துடைத்து.. தலையைத் தொட்டு ஆறுதல் கூறிய ஆளுநர்!



திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலையைத் தொட்டு ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆளுநரிடம் தங்களது இழப்பைக் கூறி அழுது புலம்பினர். அப்போது ஒரு பெண் அழுதபடி ஆளுநரிடம் பேசினார். உடனே அவரது கண்ணீரை தனது இரு கரங்களால் துடைத்து விட்ட ஆளுநர் புரோஹித் அப்படியே தலையையும் தொட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து வேறு சில கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்தார் ஆளுநர் புரோஹித்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment