வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.! இல்லனா கொளுத்திடுவாங்க ஜாக்கிரதை.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 18, 2019

பொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.! இல்லனா கொளுத்திடுவாங்க ஜாக்கிரதை.!

மொபைல் போன் இன் ரகசிய பாஸ்வோர்டு எண்களைச் சொல்ல மறுத்த கணவனை, உயிருடன் நெருப்பிட்டு கொளுத்திய மனைவியின் கொடூர கொலை முயற்சி சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



இந்தோனேசியாவைச் சேர்ந்த தம்பதியினர் டேடி பூர்னாமா(26) மற்றும் அவரது மனைவி இலம் காஹானி(25) இடையிலான ஒரு சிறிய வாக்குவாதம் கொலை முயற்சி வரை சென்று ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


பாஸ்வோர்டு எண்களை தரமறுத்த கணவன்  

டேடி பூர்னாமாவிடம் அவரின் மனைவி இலம் காஹானி, தனது கணவரின் மொபைல் போன் பாஸ்வோர்டு எண்களைக் கேட்டிருக்கிறார். பாஸ்வோர்டு எண்களை தரமறுத்த டேடி பூர்னாமாவிடம் கோபம் கொண்ட மனைவி காஹானி சண்டையிட துவங்கியுள்ளார்.


பூர்னாமாவை உயிருடன் கொளுத்திய மனைவி  

இருவரின் வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பிற்கு சென்று விட்டது. தனது பாஸ்வோர்டு எண்களை காஹானியிடம் தெரிவிக்க முடியாதென்று பூர்னாமா, காஹானியை அடிக்கத்துவங்கியுள்ளார். ஆத்திரம் அடைத்த மனைவி காஹானி அருகில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து பூர்னாமா மீது ஊற்றி சிகிரெட் பற்றவைக்கும் லைட்டர் மூலம் பூர்னாமாவை உயிருடன் கொளுத்தி இருக்கிறார்.


இருதினங்களாக தீவிர அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை 

நெருப்பு பற்றிய பூர்னாமா அலறி வீட்டிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நெருப்பை அணைத்து விரைவாக அருகிலிருந்த கெரூக் ஹெல்த் சென்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர அவசரசிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர். 


மனைவி காஹானி கைது  

அதிகப்படியான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பூர்னாமா இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவனை உயிருடன் கொளுத்திய குற்றத்திற்காக அவரின் மனைவி காஹானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டிய கணவனை மொபைல் பாஸ்வோர்டு எண்ணிற்காக உயிருடன் கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment