வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 05, 2019

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.






ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  இந்த தேர்வுக்கு ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.



ஒடிபி என்னும் ஒருமுறை கடவுச்சொல்லும் மின்னஞ்சலுக்கு வரவில்லை என பரவலாக விண்ணப்பதாரர்கள் தரப்பில் குறை சொல்லப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment