வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-11-24
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 02, 2019

உள்ளாட்சித்தேர்தல் தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம் | TN Local Body Election

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.




தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.


டிசம்பர் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கும். ஊராடி வார்டு,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடக்கும்.


கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.


மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடக்க உள்ளது.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 27, 2019

படிப்பது 7ம் வகுப்பு.. வேலை செய்வது ஐடி நிறுவனத்தில்.. அதுவும் டேட்டா சயிண்டிஸ்டாக.. ! Hydrabad Young Data Scientist

இந்தியர்களின் அதீத மூளைக்கு எல்லையே கிடையாது. அதிலும் தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த வரை அதற்கு ஈடு இணையே கிடையாது என்றே கூறலாம். ஏனெனில் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளிலும் ஐடி துறையில் பணி புரியும் ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம். 

அதை நீருப்பிக்கும் விதமாகவே ஹைதராபாத்தில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்ட் பணிக்கு, 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனை தேர்வு செய்துள்ளனராம்.


ஹைத்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைத்தன்யா டெக்னோ பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் சித்தார்த் ஸ்ரீவாஸ்தவ் பில்லி. இவன் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்டாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். இது குறித்து மாணவன் சித்தார்த் கூறுகையில், எனக்கு 12 வயது தான் ஆகிறது. நான் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்டாக பணி புரிகிறேன். 

மேலும் நான் ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் படிக்கிறேன். செயற்கை நுண்ணறிவியல் குறித்த ஆர்வம் தான் என்னை டேட்டா சயிண்டிஸ்டாக மாற உதவியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சிறுவயதிலிருந்தே கோடிங் எழுதுவதில் இருந்த ஆர்வத்தை அவரது தந்தை புரிந்து கொண்டு உதவியதாகவும் கூறியுள்ளார். 

அதற்கு மிக்க நன்றி என்று தனது தந்தைக்கும் நன்றி தெரிவித்துள்ள சித்தார்த், சிறு வயதிலேயே வேலை பெற எனக்கு நிறைய உதவி செய்தவர். எனது அப்பா, எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர். இன்று எனக்கு சாத்தியமான அனைத்துக்கும் எனது பெற்றோர் தான் காரணம் என்று தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளராம்.


மேலும் தனக்கு மிக உத்வேகமாய் ரோல்மாடாலாய் இருந்தவர் தன்மய் பஷி என்றும் சித்தார்த் கூறியுள்ளராம். ஏனெனில் சிறு வயதிலேயே அவருக்கு டெவலப்பராக கூகுளில் வேலை கிடைத்ததாக கூறியுள்ளார்.