வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய தமிழ் ராக்கர்ஸ்: கீர்த்தி சுரேஷ் பாவம் | Tamil Rockers | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 19, 2020

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய தமிழ் ராக்கர்ஸ்: கீர்த்தி சுரேஷ் பாவம் | Tamil Rockers | Vil Ambu News

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று ஓடிடியில் வெளியான பெண்குயின் படம் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.



கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்த பெண்குயின் படம் இன்று ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நல்ல வேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


பெண்குயின் படத்தில் கீர்த்தி தன் மகனை தொலைத்துவிட்டு தேடித் திரியும் கர்ப்பிணி தாயாக நடித்துள்ளார். கீர்த்தியின் நடிப்பை குறை சொல்வதற்கு இல்லை. கீர்த்தி ஒல்லியாகிப் போன பிறகு வயதானவர் போன்று தெரிவதாக ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் ரிதம் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.


விறுவிறுப்பாக போக வேண்டிய படம் இரண்டாம் பாதியில் சொதப்பிக் கொண்டது. கீர்த்தியின் மகனை கடத்தியது யார், ஏன் கடத்தினார் என்பது தெரிய வரும்போது இம்புட்டு தானா என்பது போன்று ஆகிவிடுகிறது. படம் எப்பொழுது முடியும் என்று நினைக்கும் அளவுக்கு இரண்டாவது பாதி ஊர்ந்து செல்கிறது.

படத்தை பார்த்தவர்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெண்குயின் படம் ஓடிடியில் ரிலீஸான வேகத்தில் அதை தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் கசியிவிட்டுள்ளனர். பெண்குயின் படத்தை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


எந்த படம் வெளியானாலும் அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே ஃபுல்டைம் வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கிப் போயிருக்கிறது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் மட்டும் முடங்கவில்லை. முன்னதாக கடந்த மாதம் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசியவிட்டு வேடிக்கை பார்த்தது. அதுவும் பொன்மகள் வந்தாள் ஓடிடியில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டது.


தமிழ் ராக்கர்ஸால் தயாரிப்பாளர்கள் தான் பாவம் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களுக்கு ஒரு முடிவே இல்லையா, அவர்களை அடக்க ஒருத்தர் கூடவா இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என்று முன்பு விஷால் சபதம் எடுத்தார். சபதம் எடுத்த கையோடு அதற்கான வேலையிலும் ஈடுபட்டார். அதன் பிறகு அவர் அந்த பொறுப்பை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு தன் பட வேலைகளை பார்க்கச் சென்றுவிட்டார்.


புதுப்படங்களை வெளியிடும் முன்பு அதை தமிழ் ராக்கர்ஸில் வெளியட தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தயாரிப்பாளர்கள் நீதிமன்றங்களுக்கு செல்கிறார்கள். அவர்கள் தடை உத்தரவு வாங்கிய பிறகும் கூட தமிழ் ராக்கர்ஸ் புதுப்படத்தை கசியவிடுகிறது. சில தயாரிப்பாளர்களோ தங்கள் படத்தை கசியவிட வைக்க வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸிடமே கோரிக்கை விடுத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸை அடக்க ஹீரோ அல்ல அதற்கும் மேல் ஒருவர் தேவைப்படுகிறார். அந்த நபர் எப்பொழுது வருவார் என்பது தான் தெரியவில்லை.

No comments:

Post a Comment