செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம்
வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின்
விடைத்தாட்கள் மதுராந்தகம் வி.எம்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில்
சேகரிக்கப்படுகிறது.
இந்த விடைத்தாள்கள்
சேகரிப்பு மையத்திற்கு
கடந்த 08.07.2020 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ மற்றும் மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலர் முரளி (பொறுப்பு) நேரில் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து
பாதுகாத்துக்கொள்ள மதுராந்தகம் கல்வி
மாவட்ட சாரணர் மற்றும் சாரணிய
இயக்கத்தின் சார்பாக விடைத்தாள் சேகரிப்பு
மையத்தில் சானிடைசர் மற்றும் மாஸ்க் ஆகியவை
விடைத்தாள் ஒப்படைக்கும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment