போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு விழுப்புரம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை சரகத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் என்ற வார்த்தை மரியாதைக்குரியதும், பயபக்தியுடன் சட்டத்தை மதிக்க வைப்பதற்கும் ஓர் மந்திர வார்த்தையாக உள்ளது. மக்களில் சிலர் கூறுவர் போலீஸ்தான் நாட்டை ஆளுகிறது என...! ஆம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என ஆயிரம் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அது போலீஸ்காரர்கள் மூலமாகதான் பிரதிபலிக்கிறது.
போலீஸ்காரர்களுக்கு போதிய நேர நிர்ணயம் இன்றி பணி செய்து வந்த நாட்களில் பணிச்சுமையை குறைப்பதற்காக காவல் துறை மூலமாக 1946 -ம் ஆண்டு சைனோ-இந்தியன் போருக்கு பிறகு பலகட்டங்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஊர்காவல்படையினர் (Home Guard Police).
தற்போது அதிகரித்துவரும் காவல் துறையினரின் பணிச்சுமையின் காரணமாக போக்குவரத்து சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள்தான் தற்போதைய போலீஸ் நண்பர்கள் குழு (Friends of Police)
இவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. காவல் துறையினரால் தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் தங்களை நிஜ போலீசாக பாவித்துக் கொண்டு செய்யாத அட்டகாசமே இல்லை.
போக்குவரத்து சோதனைச் சாவடிகள் அல்லது ஏதேனும் பந்தோபஸ்துகளில் காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றும்போது உண்மையான போலீஸ் முறையாக ஓர் நபரிடம் கேள்வி கேட்டு குறிப்பிட்ட நபரை விசாரணை செய்வதற்கு முன்னரே முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு குறிப்பிட்ட நபரை பாடாய் படுத்துபவர்களும் இவர்களே (FOP).
இதையெல்லாம் யோசித்தால் ஊர்காவல்படையினருக்கே ஓர் சல்யூட் அடிக்கலாம். ஆம்...! காவல் துறையினரின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக பணியாற்றிவரும் ஊர்காவல் படையினர்கள் எங்கே..? ஊரைச் சுற்றித் திரிந்த இந்த புள்ளிங்கோக்கள் எங்கே..?
பொதுமக்கள் கூறுவது என்னவென்றால்... நேற்றுவரை எனது ஏரியாவில் சுற்றித் திரிந்த புள்ளீங்கோ கும்பல் இன்று போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் சுற்றித் திரிவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது இவர்களுக்கு பதிலாக ஊர்காவல்படை மற்றும் முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சட்டம் என்றால் என்ன..? பொதுமக்களை எப்படி வழிநடத்த வேண்டும்...? நமக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை சிறிதும் அறியாத இந்த FOP பசங்களின் பணி தற்போது சாத்தான்குளம் பிரச்சனை காரணமாக பறிபோய் உள்ளது என்பதை பொதுமக்கள் பலரும் வரவேற்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்படவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யுனிபார்ம் போட்டுகிட்டு கெத்தாக திரிந்த இவர்கள் மறுபடியும் புள்ளீங்கோக்களாக திரிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லும் நாள் எங்கே....???
போலீஸ் என்ற வார்த்தை மரியாதைக்குரியதும், பயபக்தியுடன் சட்டத்தை மதிக்க வைப்பதற்கும் ஓர் மந்திர வார்த்தையாக உள்ளது. மக்களில் சிலர் கூறுவர் போலீஸ்தான் நாட்டை ஆளுகிறது என...! ஆம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என ஆயிரம் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அது போலீஸ்காரர்கள் மூலமாகதான் பிரதிபலிக்கிறது.
போலீஸ்காரர்களுக்கு போதிய நேர நிர்ணயம் இன்றி பணி செய்து வந்த நாட்களில் பணிச்சுமையை குறைப்பதற்காக காவல் துறை மூலமாக 1946 -ம் ஆண்டு சைனோ-இந்தியன் போருக்கு பிறகு பலகட்டங்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஊர்காவல்படையினர் (Home Guard Police).
தற்போது அதிகரித்துவரும் காவல் துறையினரின் பணிச்சுமையின் காரணமாக போக்குவரத்து சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள்தான் தற்போதைய போலீஸ் நண்பர்கள் குழு (Friends of Police)
இவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. காவல் துறையினரால் தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் தங்களை நிஜ போலீசாக பாவித்துக் கொண்டு செய்யாத அட்டகாசமே இல்லை.
போக்குவரத்து சோதனைச் சாவடிகள் அல்லது ஏதேனும் பந்தோபஸ்துகளில் காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றும்போது உண்மையான போலீஸ் முறையாக ஓர் நபரிடம் கேள்வி கேட்டு குறிப்பிட்ட நபரை விசாரணை செய்வதற்கு முன்னரே முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு குறிப்பிட்ட நபரை பாடாய் படுத்துபவர்களும் இவர்களே (FOP).
இதையெல்லாம் யோசித்தால் ஊர்காவல்படையினருக்கே ஓர் சல்யூட் அடிக்கலாம். ஆம்...! காவல் துறையினரின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக பணியாற்றிவரும் ஊர்காவல் படையினர்கள் எங்கே..? ஊரைச் சுற்றித் திரிந்த இந்த புள்ளிங்கோக்கள் எங்கே..?
பொதுமக்கள் கூறுவது என்னவென்றால்... நேற்றுவரை எனது ஏரியாவில் சுற்றித் திரிந்த புள்ளீங்கோ கும்பல் இன்று போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் சுற்றித் திரிவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது இவர்களுக்கு பதிலாக ஊர்காவல்படை மற்றும் முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சட்டம் என்றால் என்ன..? பொதுமக்களை எப்படி வழிநடத்த வேண்டும்...? நமக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை சிறிதும் அறியாத இந்த FOP பசங்களின் பணி தற்போது சாத்தான்குளம் பிரச்சனை காரணமாக பறிபோய் உள்ளது என்பதை பொதுமக்கள் பலரும் வரவேற்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்படவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யுனிபார்ம் போட்டுகிட்டு கெத்தாக திரிந்த இவர்கள் மறுபடியும் புள்ளீங்கோக்களாக திரிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லும் நாள் எங்கே....???
-வில் அம்பு ஆசிரியர், பழனிவேல் பாலாஜி
No comments:
Post a Comment