வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருப்பதியில் ஒரு தரிசன டிக்கெட் விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயம்..? அப்படி என்ன செலவு..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 20, 2021

திருப்பதியில் ஒரு தரிசன டிக்கெட் விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயம்..? அப்படி என்ன செலவு..?

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் போன்ற சில வகையான தரிசனங்களில் சுவாமியை வழிபடுவார்கள்.


அந்தவரிசையில், வி.ஐ.பி. தரிசனமும் உண்டு. இதனையும் தாண்டி 1 நாள் முழு தரிசன சேவை என்ற சேவையை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதற்கான கட்டணம் தற்போது கோடியை தாண்டியுள்ளது.

அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யான உற்சவம் உள்ளிட்ட பல சேவைகளை ஒருநாள் முழுவதும் கோயிலில் இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.கோடி செலுத்த வேண்டும். அதிலும், வெள்ளிக்கிழமையில் தரிசனம் செய்ய விருப்பமெனில் ரூ.1.5 கோடி கட்டணமாக தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

இப்படி செலுத்தப்படும் நபர் ஆண்டிற்கு 1 முறை என 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உதய அஸ்தமன சேவையில் ஏழுமலையானை வழிபடலாம்.

உதய அஸ்தமன சேவையில் பெறப்படும் இந்த தொகையினை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் எனவும், 531 டிக்கெட்டுகள் இந்த சேவைக்காக ஆன்லைனில் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment