வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முருகனை மாதிரி ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கு தெரியுமா.? இதோ அந்த பட்டியல்.! | Lord Ayyappan have 6 house Like Lord Murugan | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 15, 2021

முருகனை மாதிரி ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கு தெரியுமா.? இதோ அந்த பட்டியல்.! | Lord Ayyappan have 6 house Like Lord Murugan | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பொதுவாக ஆறு படை வீடு என்று சொன்னாலே நம்முடைய நினைவுக்கு வருவது கடவுள் முருகன் தான். அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. அவருடைய பிறப்புக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆனால் முருகனுக்கு மட்டுமல்ல, சபரிமலையின் நாயகனான ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதவர்கள் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கார்த்திகை கடவுள்

கார்த்திகை மாதம் தொடங்கிவிடடாலே அதில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக இருப்பது முருகனும் ஐயப்பனும் தான். ஏன் கார்த்திகைக்கு மட்டும் இந்த சிறப்பு என்றால், ஐயப்பன் மற்றும் கார்த்திகேயனாகிய முருகன் இருவரும் பிறந்த மாதம் இநத கார்த்திகை தான். அதனால் தான் மற்ற மாதங்களுக்கு இல்லாத சிறப்பு தென்னிந்தியாவில் கார்த்திகை மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்பே கார்த்திகை தீபமும் சபரிமலை ஐயப்ப சாமிக்கு ஏற்றப்படும் மகரவிளக்கும் தான்.

அதேபோல் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறுபடை வீடுகள் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐய்யப்ப சுவாமிக்கும் அறுபடை வீடு இருப்பது நிறைய பேருக்குத் தெரியாது. அது பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐய்யப்பனின் ஆறுபடை வீடுகள்

தர்ம சாஸ்தா என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவர் தான் ஐய்யப்பன். இவரைப் பார்க்கச் செல்வதை ஆண்டுதோறும் எப்போது கார்த்திகை வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய தவம் இருப்பார்கள். அதேபோல் அவருக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. அங்கும் நீங்கள் சென்ற வரலாம். ஐயப்பனின் முழு அனுகிரகமும் உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஆறுபடை வீடுகள் இதோ...

  • ஆரியங்காவு
  • அச்சன் கோவில்
  • குளத்துப்புழா
  • எரிமேலி
  • பந்தளம்
  • சபரிமலை

1.ஆரியங்காவு

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஐயப்ப சுவாமியின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்று. இது கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்னும் ஊரில் இருக்கிறது. 


பொதுவாக ஐய்யப்பன் என்றாலே நமக்குத் தெரிந்தவரையில் அவர் பிரம்மச்சாரி என்பது தான். ஆனால் ஆரியங்காவில் அவர் புஷ்கலை என்னும் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலப்பெண்ணை திருமணம் செய்தபடி, துணையோடு காட்சி தருகிறார். மார்கழி மாதத்தில் தான் இந்த கோவிலில் ஐய்யப்ப சுவாி - புஷ்கலை தம்பதியினரின் திருமண வைபவ நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த கோவிலில் ஐயப்பனுக்குக் காவல் தெய்வமாக, கருப்பசாமியும் கருப்பாயி அம்மனும் வீற்றிருக்கிறார்கள்.


2.அச்சன் கோவில்

இங்கு வீற்றிருக்கும் தெயவத்தின் பெயர் அச்சன்கோவில் சாஸ்தா. இங்குள்ள சாஸ்தாவின் சிலையானது மிகவும் பழமையானது. 


இந்த கோவிலில் ஐய்யப்பன் அமர்ந்த கோலத்தில் கையில் அமுதத்துடனும் காந்த மலை வாளும் ஏந்திக்கொண்டிருக்கிறார். இந்த ஐய்யப்பனின் இரண்டு புறத்திலும் பூாணா மற்றும் புஷகலை ஆகிய இருவரும் மலர் தூவிக் கொண்டிருப்பது போல காட்சியளிக்கிறார். இந்த சாஸ்தா கல்யாண சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டால், திருமணத் தடைகள் ஏதேனும் இருந்தால் நீங்கும என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த கோவிலும் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் பகுதிக்கு அருகில் தான் இருக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும பக்தர்களில் பலரும் இந்த அச்சன் கோவிலைத் தேடிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

3.குளத்துப்புழா

ஐய்யப்பன் கோவில்களில் மிக முக்கியத் தலமாகக் கருதப்படுவது இந்த குளத்துப்புழை ஐயப்பன் கோவில். மற்ற ஐயப்பன் கோவிலுக்கு இல்லாத சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. 


அது என்னவென்றால், இந்த திருக்கோயிலில் ஐயப்பன் குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாகக் காட்சியளிக்கிறார். அதனாலேயே இந்த கோவிலுக்குள் இருக்கிற நுழைவாயில் பகுதிகள் சிறுவர்கள் சென்று வரும் அளவுக்கு குறுகியதாகவே இருக்கிறது.

இந்த கோவிலும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது. தமழ்நாட்டில் செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. இந்த கோவிலில் உள்ள முக்கியமான சன்னதிகளுள் ஒன்று யட்சியம்மன் சன்னதி. குழந்தை இல்லாத பெண்கள் இந்த சன்னதியில் சென்று தொட்டில் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

4.எரிமேலி

எருமேலி, எரிமேலி என இரண்டு விதமாக அழைக்கப்படுகிறது. கேரள மாவட்டம் கோட்டயம் பகுதியில் இருக்கிறது இந்த எருமேலி ஐயப்பன் கோவில். பொதுவாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேரும் இடமாக இந்த இடம் இருக்கிறது. பந்தள மன்னரான ராஜசேகர பாண்டியன் என்னும் மன்னனால் இந்த இடத்தில் கட்டப்பட்ட ஐயப்பன் கோவில் தான் இது. 


இந்த கோவிலில் வேட்டைக்குப் போகும் தர்ம சாஸ்தாவாக அம்பு மற்றும் வில்லுடன் காட்சி தருகிறார் ஐய்யப்பன். எருமைக்கொல்லி என்னும் பெயர் தான் காலப்போக்கில் எருமேலி என்று மருவியிருக்கிறது.

5.பந்தளம்

பந்தளம் என்பது கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதி. சபரிமலையில் குடிக்கொண்டிருக்கின்ற ஐய்யப்பன் மண்ணுலகில் பந்தள மகாராவின் மகனாகப் பிறந்து வளர்ந்திருக்கிறார் என்ற நம்பப்படுகிறது. 


அதனாலேயே சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலங்களில் இந்த பந்தளத்தில் உள்ள வலியக்கோயிக்கல் என்னும் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இது அச்சன்கோவில் ஆற்றங்கரைக்கு அருகில் தான் இருக்கிறது. இந்த கோவிலின் சிறப்பே, மகரவிளக்கு நடக்கும் மூன்ற நாட்களுக்கு முன்பாக ஐய்யப்பனின் புனித ஆபரணங்கள் அனைத்தும் திருவாபரணம் என்ற நிகழ்ச்சியின் பெயரில் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்குக் கொண்டு செல்லப்படும்.

6.சபரிமலை

சபரிமலையைப் பற்றி தனியே சொல்ல வேண்டிய தேவையே இல்லை். சபரிமலை பற்றியும் அங்கு வீற்றிருக்கும் ஐய்யப்பனின் ஆற்றல் மற்றும் அருளைப் பற்றியும் எல்லோருக்கும் தெரிந்தது தான். 


கேரளாவில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் உள்ள பத்தினம்தித்தா என்னும் மாவட்டத்தில் தான் சபரிமலை இருக்கிறது. மஹிசி என்னும் கொடிய அரக்கியைக் கொன்று, ஐய்யப்பன் தியானம் செய்யும் இடம் தான் இந்த சபரிமலை. பதினெட்டு மலைகளுக்கு இடையே தான் ஐய்யப்பன் கோவில் அமைந்திருந்திருக்கிறது. அதன் குறியீடு தான் பதினெட்டு படி. ஒவ்வொரு படியும் ஒரு மலை. ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 5 கோடி பேர் சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்களாம்.

கார்த்திகை மாதத்தில் ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொள்வார். மண்டல பூஜையில் தொடங்கி, மகர விளக்கு வரை சிலர் இந்த விரதத்தைத் தொடர்ந்து இருந்து மலைக்கு செல்வார்கள். இப்படி எல்லோராலும் பெரும் பக்தியுடனும் கொண்டாட்டத்துடனும் பார்க்கப்படுகின்ற ஐய்யப்பனுக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. சபரிமலைக்குச் செல்பவர்கள் இங்கும் சென்று தரிசித்து வந்தால் ஐய்யப்பனின் முழுமையான அருளைப் பெற முடியும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment