வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Annamalai IPS BJP
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Annamalai IPS BJP. Show all posts
Showing posts with label Annamalai IPS BJP. Show all posts

Wednesday, June 29, 2022

அண்ணாமலைக்கு முதல்வராகும் தகுதியுண்டு- விஜய் பட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பேரரசு. இவர் இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.


இந்த நிலையில், இயக்குனர் பேரரசு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் முதல்வராகும் தகுதியுண்டு எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :திமுகவில் அண்ணா, கலைஞர் போன்ற பேச்சாளர்கள் இருந்தனர். அதிமுகவில் எம்.ஜி.ஆர் முகம் இருந்தது.பாஜகவில் பேச்சாளர்கள் இல்லை. மக்களுக்கு அறிமுகமான முகங்கள் இல்லை. ஆனால், இப்போது, அண்ணாமலையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவருக்கு தமிழக மக்கள் எங்கு சென்றாலும் வரவேற்பு அளிக்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் முதல்வராகும் தகுதியுண்டு எனத் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


அரசியல் தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 20, 2021

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்ற செயல்களுக்கு திமுகவினர் தலையீடே காரணம்..!.. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!

தமிழ்நாட்டில் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கக் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவதே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாஜகவுடன் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, "தமிழக டிஜிபி பதவி என்பது நடுநிலையாக அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களுக்கும் நியாயம் நீதி வழங்கக்கூடிய பதவி. ஆகவே டிஜிபி சைலேந்திர பாபு நடுநிலையாக இருக்க வேண்டும். திமுக சமூக வலைத்தளங்களில் வரும் போஸ்ட் எப்படி இருக்கிறது? பாஜக எப்படி இருக்கிறது என நீங்களே பார்க்கலாம். இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் சமமாக இல்லை நடுநிலையாக டிஜிபி இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சி தலையீடு அனைத்து இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவது தான். மாநில, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டு காவல்துறையினருக்கு இடையூறு செய்கின்றனர்.


ஆட்சியில் இல்லாத போது #Gobackmodi என்று சொல்லி இருந்தாலும் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். பிரதமரின் வருகையைத் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறோம்.

தமிழகத்தில் திமுகவினர் குரு நில மன்னர்கள் போல ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சி செய்கின்றனர். ஆனால் பாஜகவில் இந்த நிலை இல்லை. பாஜகவில் கடைசி நிலை தொண்டனும் முதல்வர் ஆகலாம்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கே எஸ் அழகிரி பாஜகவை விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், " கே எஸ் அழகிரி ஒரு பல்லில்லாத பாம்பாகக் கட்சியில் செயல்பட்டு வருகிறார். கட்சியில் தவறு செய்பவர்களைக் கூட கண்டிக்க முடியாமல் உள்ளார். அவருக்கு வாழ்த்துகள். கேரளாவில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட பாஜக நிர்வாகி விவகாரத்திற்குத் தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

கம்யூனிஸ்ட்கள் கேரளாவைக் கொலைகள் நடக்கும் இடமாக மாற்றி விட்டனர். கேரள முதல்வர் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும் சங்கி என்பது தவறான வார்த்தை என்று குறிப்பிட்ட அவர், சீமான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்றும் கூறினார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, December 12, 2021

தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை! | BJP Annamalai Meet to Tamilnadu Governor | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.


சமூக வலைத்தளங்களில் காஷ்மீருடன் ஒப்பிட்டு தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாகவும் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனின் அளுநரை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாஜக நிர்வாகியான கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டவர்களின் கைது விவகாரம் குறித்து ஆளுநரிடம் பேசியதாக பாஜக தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ள அண்ணாமலை, 'தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் திமுக அரசனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம்' என பதிவிட்டுள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்