வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Bus Drivers Dangers
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Bus Drivers Dangers. Show all posts
Showing posts with label Bus Drivers Dangers. Show all posts

Thursday, February 20, 2020

பெண் பயணிகளுடன் ‛கடலைபோட' பஸ் டிரைவர்களுக்கு தடை | Bus Drivers are getting warning to talk with Ladies Passengers

பேருந்தில் முன் பக்கம் அமரும் பெண் பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




பயணம் என்றாலே பஸ், ரயில் தான் பாதுகாப்பானது என்ற நிலையில், அப்படியான பஸ் பயணத்தையும் சில டிரைவர்களும், அவருடன் முன் பக்கம் அமர்ந்து பேச்சு கொடுத்து வருபவர்களும் பரலோகத்திற்கு செல்லும் பயணமாக மாற்றுகின்றனர்.


தொலைதூர பயணத்தில் டிரைவர் அசதியாக இருந்து தூங்கி விடக்கூடாது என்பதற்காக அவருடன் அவ்வப்போது பேச்சு கொடுத்து வரலாம். ஆனால், அதையே வசதியாக வைத்துக்கொண்டு பெண்களிடம் டிரைவர்கள் கடலை போட்டுக் கொண்டே வருவதால் வண்டியில் இருக்கும் மற்றவர்களின் நிலை அதோகதியாகி விடுகிறது.
 

பேச்சில் கவனம் செலுத்தும் டிரைவர்கள், ரோட்டில் கவனம் செலுத்தாமல் வண்டியை எங்கேயோ கவிழ்த்து விடுகின்றனர். பெண்களுடன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள், பெண்கள் முன்னே தனது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, மொத்த பயணிகளின் உயிரையும் பணயம் வைப்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால், பஸ்சின் உள்ளே இருக்கும் சில பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.


இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நேற்று (பிப்.,19) சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பஸ்சின் முன் பக்கம் அமரும் பெண்களிடம், பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் பேசக்கூடாது.


அவ்வாறு விதியை மீறி நடக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் கூட விபத்து நிகழும் என்பதால், டிரைவர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.