வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts

Thursday, August 22, 2019

ஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி!

கட்டின கணவரை 11 முறை வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மனைவி.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது. நல்லசோப்ரா பகுதியில் வசித்து வரும் தம்பதி சுனில் கதம் - ப்ரனாலி. ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிராக காதலித்தவர்கள்.. கடந்த 2011ம் வருஷம் கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ப்ரனாலிக்கு 33 வயதாகிறது.


ஆனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையும் தகராறும் நடந்து கொண்டே இருந்தது. நேற்று விடிகாலை 5 மணிக்கு கூட இவர்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, விருட்டென கிச்சனுக்குள் நுழைந்தார்.
 அங்கே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கணவரை சரமாரியாக வெட்டினார். தொடர்ச்சியாக கத்தியால் 11 முறை கணவரை வெட்டினார். அப்பவும் ஆவேசம் அடங்கவில்லை.. அதனால் இறுக்க பிடித்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.

 பிறகு, மாமனார், மாமியாரிடம் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மருமகள் பேச்சை நம்பவே இல்லை. அதனால் மகனின் கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் சொன்னார்கள்.

இதையடுத்து, சுனிலின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் மனைவியின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நைட் நேரம்.. காய் வாங்க கடைக்கு போன 50 வயது பெண்ணை.. கடத்தி சீரழித்த 20 வயது இளைஞர்கள்!

காய் வாங்க போன 50 வயது பெண்மணியை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 2 பேரை தேடும் படலம் நடந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவர். கணவனை இழந்தவர். ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.


இவர், பரவை மார்க்கெட்டில்தான் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பொலிரோ காரில் 4 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் அனைவருமே 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். அந்த பெண்மணியை, 4 பேரும் இழுத்து சென்று காருக்குள் தள்ளி, கடத்திச் சென்றனர்.


பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு பெண்ணை தரதரவென இழுத்து போன அவர்கள், அங்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு காய்கள் வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் பணம், செல்போன், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

 வீட்டுக்கு சென்ற பெண், மகனிடம் நகை,பணம் திருடு போனது பற்றி மட்டும் சொல்லி உள்ளார். நடந்த அக்கிரமத்தை சொன்னால், அசிங்கமாயிடும் என்று நினைத்து சொல்லாமல் இருந்திருக்கிறார். பணம், நகை திருடு போனதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கூப்பிட்டு கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு போலீசாரிடம் பெண்மணி இதைதான் சொன்னார்.


ஆனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவும்தான், துருவி துருவி கேட்டனர். அதன்பிறகுதான் கூட்டு பாலியல் பற்றி விஷயத்தை சொன்னார் பெண்மணி. இதையடுத்து, போலீசார், உடனடியாகக் அந்தப் பெண்ணை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 காரின் தடயங்கள், சென்ற வழி, இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கடத்தப்பட்ட பொலிரோ காரையும், சம்பந்தப்பட்ட சின்னையா, விஜய் ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்து, நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராமு, வெங்கடேஷ் ஆகிய மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.


Tuesday, August 20, 2019

ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ..! இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..?.


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான். இப்போது இந்தியாவில் ஏடிஎம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது. டிஜிட்டல் பேமென்டுகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் கார்டு சேவைகளை யை அகற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பிளாஸ்டிக் கார்டு திட்டத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ, இதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.



ஐந்தில் ஒரு பங்கு
  டெபிட் கார்டுகளையே என்றும், இது நாட்டின் மக்கள் தொகை அளவில் ஐந்தில் ஒரு பங்கினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கூறியுள்ள எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னேஷ் குமார், டெபிட் கார்டுகளை அகற்றுவது எங்கள் விருப்பம், அவற்றை எங்களால் அகற்ற முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் கடந்த திங்கட்கிழமையன்று annual Fibacல் கூறியுள்ளார். மேலும் நாட்டில் 3 கோடி கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளன என்றும் கூறி உள்ளார்.


பிளாஸ்டிக் பயன்பாடு
  இந்த பிளாஸ்டிக் அட்டைகளை குறைப்பதன் மூலம், நாட்டை டெபிட் கார்டு குறைவாக உள்ள நாடாக மாற்றுவதற்கு, எஸ்.பி.ஐ திறவுகோலாக இருக்கும். மேலும் இதற்காக தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக, மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் ஆப்பை பற்றியும் கூறியுள்ளார். மேலும் இந்த யோனோ கேஸ் ஆப்பை ஒருவர் பயன்படுத்தும் போது, அவர்களுக்கு ஏடிஎம்கள் தேவை இருக்காது. .
நோ கார்ட் 
 அவை இல்லாமலேயே அவரால் பணத்தை எடுக்க முடியும். அதோடு கார்டு இல்லாமலேயே, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, அதன் வணிக நிறுவனத்திற்கு பணங்கள் செலுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது 68,000 யோனோ கேஸ் பாயிண்டுகள் அமைத்துள்ளதாகவும், இது இன்னும் 18 மாதங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விரிவாக்கம் மேலும் டெபிட் கார்டு உபயோகத்தை குறைக்கலாம் என்றும் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.


யோனோ 
 இது தவிர இந்த யோனோ தளம் கிரெடிட் கார்டு தளமாகவும், சில பொருட்களை வாங்குவதற்கு கடனையும் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகள், உங்களது பாக்கெட்களின் இருக்கும் தேவை குறைவாகவே இருக்கும் என்றும் குமார் கூறியுள்ளார். ஒருவேளை இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால், இனி டெபிட் கார்ட்கள் எனப்படுகின்ற ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் எப்படி வங்கிச் சேவையைப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. .




Wednesday, August 14, 2019

பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா..

தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். 
 
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.

கூவி ஏலம் 
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.

விசாரணை  
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

வாராங்கல்  
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.


போலீஸ் கைது 

அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காப்பகத்தில் 
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சன்னி லியோனோனுக்கும் மோடிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னனு தெரியுமா?

கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.



பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.

 இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும்



 சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது.

 அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.



Monday, August 12, 2019

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!


வாகனம் இல்லையென்றாலும் அதற்கான பேன்சி எண்ணை முன்கூட்டியே வாங்கும் வகையிலான புதிய அறிவிப்பை ஆர்டிஓ அலுவலகம் வெளியிட்டுள்ளது



ஒரு வாகனம் சாலையில் இயங்க எந்த அளவிற்கு எரிபொருள் தேவையோ... அதே அளவிற்கு, அதனை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பதிவெண் முக்கியமாக இருக்கின்றது. இது ஒவ்வொரு வாகனத்திலும் தனித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


அந்தவகையில் இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனங்களுக்கும், அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் நம்பர் பிளேட் வழங்கப்படுகின்றது. இந்த பணியினை அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமாக வாகனங்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கவே இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது. இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். அவை பல்வேறு நுணுக்கங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அந்தந்த மாநிலத்தை குறிக்கும் வகையில் முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL எனவும் வழங்கப்படுகின்றது.


இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆர்டிஓ-வின் அலுவலக எண் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக TN 01, TN 05 இம்மாதிரியான எண் இடம்பெறும். இதையடுத்தே வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண் ஆங்கில எழுத்துகளை (A,B,C,D) அடுத்து நம்பரில் வழங்கப்படும். உதாரணாக, TN 01 AA 1111 என வழங்கப்படும்.


இவ்வாறு நாட்டில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேகமாக, அதை இனம் கண்டறியும் வகையில் பதிவெண்கள் வழங்கப்படுகின்றது. இது, வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய இது உதவும்.


அதேசமயம், பலர் தங்களது வாகனங்களை, எளிதில் மறக்கமுடியாத மற்றும் கண்ட உடன் கண்களை கவரும் வகையிலான பேன்சி எண்களால் அலங்கரிக்க விரும்புகின்றனர். இந்த கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆகையால் பேன்சி எண்மீதான மோகத்தைத் தீர்க்கும் வகையில், ஆன்லைனில் பேன்சி எண்களை விற்பனைச் செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது நம் தமிழகத்தில் இல்லை எண்பதுதான் வேதனையளிக்கும் உரியது.


பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறைதான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கையினால், பேன்சி எண் ஆர்வலர்கள் ஏலம் எடுக்க ஆர்டிஓ அலவலகங்களை நாட வேண்டும் என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. பேன்சி எண்ணிற்கான விற்பனை இனி ஆன்லைனில் விட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பாணையைதான் பிஹார் போக்குவரத்துத்துறை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. இந்த ஏலமானது, ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை விடப்பட உள்ளது. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆர்டிஓ அலுவலகம் என எங்குவேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களுக்கு ஆடம்பரமான எண்களை ஒதுக்குவதற்கான புதிய முறைக்கு அம்மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 646 கவர்ச்சிகரமான எண்கள் சலுகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.


பொதுவாக, பிறந்ததேதி, கல்யாண நாள் மற்றும் ராசி எண் என்றுதான் பலர் பேன்சி எண்களை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு, ஒரே எண்ணை இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தால், அவர்களுக்கு இ-ஏலம் விடப்பட உள்ளது. இந்த இ-ஏலத்திற்காக ரூ. 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆர்டிஓ அலுவகம் திருப்பி தராது.


இந்த இ-ஏலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கே அந்த பேன்சி எண் வழங்கப்படும். மேலும், அதிக தொகையில் ஏலம் எடுத்தவர், ஏழு நாட்களுக்குள் வங்கி வரைவோலை அல்லது இணையதளம் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். இதில், தவறினால் பேன்சி மீண்டும் ஏலத்திற்கு சென்றுவிடும்.


அதேபோன்று, ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணை 90 நாட்களுக்குள் வாகனத்துடன் பதிவு செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த எண் காலாவதியாகிவிடும் எனவும் கூறப்படுகின்றது. அதேசமயம், ஏல தொகையும் திருப்பு தரப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் ஆர்டிஓ முன்வைத்துள்ளது.
இத்துடன், தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான வெவ்வேறு அடிப்படை விகிதங்கள் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Tuesday, August 06, 2019

கலாம் கனவு காணச் சொன்னார்.. இங்கு ஒரு "குடிமகன்".. கால்வாயில் அதை கண்டு கொண்டுள்ளார்!

மதுபோதையின் உச்சத்தில் பாதாள சாக்கடையில் சொகுசாக உறங்கிய இளைஞரால் மக்கள் வேதனை அடைந்தனர். 
 

ஒரு சினிமாவில் வசனம் வரும். படிக்காதவனைக் கூட பார்க்காமல் இருக்கலாம். ஆனால் குடிக்காவனை பார்க்காமல் இருக்கவே முடியாது என்று. அந்த அளவுக்கு அரசு ஆதரவுடன் குடிப் பழக்கம் அமோகமாக மேலோங்கி வளர்ந்து தழைத்துக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் அழிந்து நாசமாகி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வயது வித்தியாசமின்றி மது பழக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் அடிமையாகி வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை இழந்து நிற்கும் அவலங்களோடு எண்ணத்தகாத செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

போதை அவலம் 
மதுபோதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சகட்ட அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதற்கு சான்றாக தான் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான்நகர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசு மதுபான கடை ஒன்றில் 30வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார்.

தள்ளாடி தள்ளாடி
போதை தலைக்கேறியது. ஏறிய போதையில் அப்படியே தள்ளாடித் தள்ளாடி நடந்தார். பின்னர் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் நிம்மதியாக படுத்துக் கொண்டார். சாக்கடை வாசம் சென்ட் போல மணந்ததா என்று தெரியவில்லை.. அப்படியே சுகமாக தூங்க ஆரம்பித்து விட்டார். அவர் சாக்கடையில் உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாக்கடையில் ஓய்வு 
போதையில் தடுமாறி உள்ளே விழுந்த இளைஞர் தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சாக்கடை நீரில் மிதந்தபடி தூங்குகிறார். இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். நாட்டின் தூண்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர் சமுதாயம் இது போன்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதன் சாட்சியாக அமைந்துள்ளது இந் காட்சி.

வருங்கால இந்தியா
இதைப் பார்த்த சில இளைஞர்கள் கருமம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு, போதை இளைஞரை தூக்கி போதையை தெளியவைத்து அனுப்பி வைத்தனர். இளைஞர் மது போதையில் பாதாள சாக்கடையில் ஸ்டைலாக உறங்கும் காட்சி நெட்டிசன்களிடையே வேகமாக பரவி வருகிறது. வருங்கால இந்தியா.. அல்ல அல்ல.. தற்கால இந்தியாவின் இளைஞர் சமுதாயம் இப்படி குடித்துக் கெட்டுப் போய்க் கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல.

Monday, August 05, 2019

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி

லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
 


 குடியிருப்பில் 3 சிறுவர்கள்  லிப்ட்டில் ஏறுகிறார்கள். அப்போது லிப்ட் நகர்ந்ததும் லிப்ட் கதவில் மாட்டிய கயிறு  ஐந்து வயது சிறுவன் கழுத்தில் மாட்டி மேலே தூக்கப்பட்டான். உடனடியாக சிறுவனின் சகோதரி வேகமாக செயல்பட்டு சிறுவனின் கழுத்தில் மாட்டிய கயிறை அகற்றினார். இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த புதன்கிழமை நடந்ததாக தி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில்  சகோதரி நிதானமாக  நிலைமையை கையாண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
''அந்த பெண் மிக முக்கியமான சூழ்நிலையில்  மிக விரைவாக கையாண்டார்'' என்று வீடியோவுக்கு பதிலளித்த ஒருவர் கூறி உள்ளார். பதட்டமில்லாமல் நிலமையை கையாண்டது மிகவும் நல்லது  என மற்றொருவர் கூறி உள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, சிறுவன் உடல்நிலை தற்போது சரியில்லாமல் இருப்பதாகவும்,  குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Thursday, August 01, 2019

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர் அஜித்குமார்


மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் நடிகர் அஜித்குமார்.






கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில் கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.


கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் 314 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.


வாட்டர் பார்க்கில் இயந்திரம் உருவாக்கிய 10 அடி உயரமுள்ள சுனாமி அலை; 44 பேர் காயம்

சீனாவில் வாட்டர்பார்க் ஒன்றில் இருக்கும் அலைகள் உருவாக்கும் இயந்திரம் பழுதாகி சுனாமி போன்ற பேரலையை உருவாக்கியதில் 44 பேர் காயம் அடைந்தனர்.



 வடக்கு சீனாவில் ஷுய்யுன் வாட்டர் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் ஒரு நீச்சல் குளத்தில் இயந்திரம் ஒன்றின் மூலம் செயற்கையான அலைகள் உருவாக்கப்படுகிறது.
 சமீபத்தில் அந்த நீச்சல் குளத்தில் தங்கள் குழந்தைகளுடன் பலர் விளையாடிக்கொண்டு இருந்த போது, திடீரென சுனாமி
போன்ற  10 அடி உயரமுள்ள பேரலை ஒன்று அங்கு உருவாகி உள்ளது.


இதில் அங்கு இருந்தவர்கள் பலர் நீச்சல் குளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 44 பேர் காயம் அடைந்த நிலையில், இதன் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
 செயற்கையாக அலைகள் உருவாக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்ததாகவும் அதனை இயக்கிய நபர் மீது தவறில்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் அந்த பூங்கா மூடப்பட்டு இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Wednesday, July 17, 2019

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்.. என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க! l

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 
இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.


சங்கீதா 
 ஆனால் வாழ்வதற்கு தேவையான பணத்துக்கு எங்கே போவது என்பது குறித்து ஜிதேந்திர ராய் யோசனை செய்தார். அப்போது அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது. அதாவது மனைவியின் போலீஸ் சீருடையை திருடி சங்கீதாவுக்கு கொடுத்துவிட்டார்.


வாழ்க்கை 
 அத்தோடு விட்டாரா இந்த ஜிதேந்திர ராய், சங்கீதாவுக்கு போலி அடையாள அட்டைகளையும் ரெடி செய்து கொடுத்துவிட்டார். இதை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்து இவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

போலி சான்றிதழ்  
இதுகுறித்து மனைவிக்கு தெரியவந்தது. பின்னர் அவர் சங்கீதா மக்களை ஏமாற்றி பணம் பறித்த போது கையும் களவுமாக பிடித்தார். அப்படியே இதற்கு காரணமான ஜிதேந்திர ராயையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜிதேந்திர ராய்
கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியின் டிரஸ்ஸை திருடி கொடுத்த சம்பவம் பெரும் சிரிப்பை வரவழைக்கிறது.மேலும் மனைவியின் உடையும் கள்ளக்காதலியின் உடையும் ஒரே அளவாக இருந்தது ஜிதேந்திர ராய்க்கு கிடைத்த லக் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.


Friday, July 05, 2019

பெண் குளிப்பதை பேனா கேமரா மூலம் படம் பிடித்து.. 55 வயதில் சிக்கிய அறநிலையத்துறை இணை ஆணையர்! | Run World Media

பெண் குளிக்கிறதை கேமரா மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார் மிஸ்டர் பச்சையப்பன்.. வயசு 55.. செய்யும் தொழில் இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்! யாரா இருந்தால் என்ன, கேடு கெட்ட செயலை செய்ததால் பச்சையப்பனை தூக்கி உள்ளே வைத்துவிட்டது போலீஸ்! மதுரை, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த பச்சையப்பன்.


இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். கடந்த ஜுன் 28ம் தேதி, சதுரகிரி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் அங்கு பணி நிமித்தமாக சென்றார்.


பேனா 
 அப்போது கோயில் பகுதியில் உள்ள பாத்ரூமில் அந்த பெண் அதிகாரி குளிக்க சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூமில் ஆணியில் ஒரு பேன்ட் தொங்கி இருந்திருக்கிறது. அந்த பேன்ட்டில் சொருகி இருந்த ஒரு பேனா ரெட் கலரில் எரிந்திருக்கிறது.




குளியல் காட்சிகள்
 இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பேனாவை எடுத்து பார்த்தால், அது பேனா இல்லை, பென் கேமரா என்பதும், அவ்வளவு நேரமாக குளித்த காட்சி எல்லாம் அதற்குள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதைவிர வேறு சில ஆபாச வீடியோவும் அதில் இருந்ததாம்.


அது மட்டுமில்லை.. அந்த பேன்ட் பச்சையப்பனுடையது என்றும் தெரியவந்தது. உடனடியாக சாப்டூர் போலீசிலேயே பெண் புகார் தந்தார். போலீசாரும் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.




காஸ்ட்லி காமிரா 
இந்நிலையில், விடிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்து எஸ்பி ஆபீசில் வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அந்த பென் கேமரா.. ரொம்ப காஸ்ட்லியாம். அதில் எது ரெக்கார்ட் ஆனாலும், செல்போனில் லைவ்-ஆக பார்க்க முடியுமாம். இதையெல்லாம் கேள்விப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சியில் உள்ளது.




தீவிர விசாரணை 
 கைதான பச்சையப்பன் சாதாரண ஆள் கிடையாது. சவுடார்பட்டியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தலில் தொடர்பு உள்ளவராம்.


 இதே சதுரகிரி கோயில் உண்டியல் வருமானத்தை எண்ணும்போது பணத்தில் கையாடலும் செய்துள்ளாராம். போன வருஷம் தன் பிறந்த நாளுக்கு அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவழைத்து காஸ்ட்லி கிப்ட் கேட்டும் வாங்கி இருக்கிறாராம். இவ்வளவு ஆட்டம் போட்ட பச்சையப்பன் இன்று களி தின்று, கம்பி எண்ண போகிறார்!




Thursday, July 04, 2019

இயர்போனுடன் டூவீலர் ஓட்டினால் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இனி இசை மழையில் நனைய மாட்டீர்கள் | Run World Media

டூவீலர்களில் பயணம் செய்யும்போது இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.




இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளும் மிக சரியாக கடைபிடித்தாலும் கூட, கூடுதல் கவனத்துடன் இருக்காவிட்டால், விபத்தில் சிக்கி கொள்வதற்கான அபாயம் உள்ளது. ஏனெனில் இங்கு மற்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார்கள் என கூற முடியாது.



வாகனங்களை இயக்கும்போது லேன் மாறுவதற்கு என விதிமுறைகள் (Lane Rules) உள்ளன. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இங்கு அதனை கடைபிடிப்பது கிடையாது. அப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது என்றும் கூட சொல்லலாம். எனவே திடீர் திடீரென லேன் மாறி மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சிலர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் இயர்போன்கள் (Earphones) மூலமாக பாடல்களை ரசித்து கேட்டு கொண்டே பயணிக்கும் வழக்கம் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு மட்டுமின்றி, வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசவும் பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் எழும் சப்தங்கள் உங்களுக்கு கேட்காமல் போய் விடலாம். குறிப்பாக மற்ற வாகன ஓட்டிகள் ஹாரனை ஒலித்தால், அது உங்களுக்கு கேட்காமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மற்ற வாகன ஓட்டிகளுடன் உங்களுக்கு வீண் தகராறையும் ஏற்படுத்தி விடும்.



அத்துடன் வாகனம் ஓட்டும்போது நீங்கள் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தால், உங்கள் கவனம் திசை திரும்பி விபத்து நேர்வதற்கான அபாயமும் உள்ளது. இந்த சூழலில் இயர்போன்களில் பாடல்களை கேட்டு கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.


இதன்படி இயர்போன்கள் மூலமாக பேசி கொண்டோ அல்லது பாடல்களை கேட்டு கொண்டோ இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கென புதிய அறிவிப்பு ஒன்றை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.



இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''இயர்போன்கள் வாகன ஓட்டிகளின் காதுகளை அடைத்து விடும். இதனால் விபத்து நேர்வதற்கான அபாயம் உள்ளது. வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது, பாடல்கள் கேட்பது என இரண்டுமே விதிமீறல்தான்'' என்றார்.



போலீசார் கண்காணித்து கொண்டிருக்கையில் மட்டும் இயர்போன்கள் இல்லாமல் இருந்தால் போதும் என நினைத்து விட வேண்டாம். போலீசார் இல்லாவிட்டாலும் கூட அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும். இதன் மூலமாக வாகனம் ஓட்டும்போது இயர்போன்களை பயன்படுத்துபவர்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெங்களூர் போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் புனே போக்குவரத்து போலீசாரும், இயர்போன்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.



எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை | Run World Media

உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி. கிருமியை அழிக்கும்  மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்சிகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

மனித உயிருக்கு எமனாக வரும் இந்த அபாயகரமான நோய் முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது. 1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 

 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.

எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் உயிர்க்கொல்லி கிருமி பாலியல் உறவு, ரத்தப்பறிமாற்றம் போன்றவற்றால் மனிதர்களுக்கு இடையே பரவுகிறது.


 எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் கிருமியின் அணுகுமுறை சாதாரண நோய்க் கிருமிகளிலிருந்து மாறுபடுகிறது, எச்.ஐ.வி கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முதலில் தாக்குகிறது. பின்னர், நாட்கள் செல்லச்செல்ல ஜீன்களில் கிருமியானது கலந்துவிடுகிறது.


அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பாகும். இது எப்படிஎன்றால் நமது நாட்டை காக்கும் காவலர்களை முற்றிலுமாக அழித்து விட்டால் நிலைமை என்ன ஆகும். 

மக்கள் பாதுகாப்பை இழந்து விட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் என்ன தீங்கு வேண்டுமானாலும் செய்து நம்மை அழித்து விடமுடியும். எய்ட்ஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலும் அழித்து விட்ட நிலையில் ஒரு சாதாரணக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கூட நமது உயிரை பலிவாங்கி விடும்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தற்போது வரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர்.

எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்கு செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர். எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.
தற்போது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சை முழுவதும் நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாளை நீட்டித்து அவர்கள் இயல்பாக வாழ வழி செய்கிறது.

தற்போது, எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.


Tuesday, July 02, 2019

ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!

சுடிதார் அணிந்த இந்த இரு இளம்பெண்களை பார்க்கவே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள்.. இவர்களா இந்த காரியத்தை எல்லாம் செய்தது என்று நினைத்தால் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

 சென்னை ஆழ்வார்பேட்டையில் பீமண்ணா கார்டன் பகுதியில் 2 இளம் பெண்கள் இன்று சுற்றி திரிந்துள்ளனர். ஒருவர் மஞ்சள் கலர் சுடிதார், இன்னொருவர் ரெட் கலர் சுடிதாரில் இங்குள்ள கடைப்பகுதிக்கு வந்துள்ளனர்.



அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்களிடம் நகைகளை பறிப்பதும், பணத்தை கொள்ளையடிப்பதுமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, இளைஞர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, அந்த பணத்தை பறித்து கொண்டு இந்த இளம்பெண்கள் ஓடியதாக தெரிகிறது.


இதனால் கூச்சலிட்ட அந்த இளைஞர், பெண்களை விரட்டி சென்றுள்ளார். பொதுமக்களும் சேர்ந்து 2 பெண்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்த பர்ஸை வாங்கி பார்த்ததில், ஏகப்பட்ட நகைகள் இருந்திருக்கின்றன.


 மேலும் பர்ஸில் 25 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த பணத்தையும் வைத்திருந்தது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் மொத்தமாக சேர்ந்து இரு பெண்களையும் தாறுமாறாக கேள்வி கேட்டு விசாரித்தனர். அந்த பெண்கள் குழந்தையின் வெள்ளிக்கொலுசைகூட விட்டு வைக்கவில்லை.


இவர்களிடமிருந்து 40 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்கள் பறிமுதல் செய்தனர். இந்த பெண்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை என்பதால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது.




Saturday, June 29, 2019

உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

"ம்மா.. என் சாப்பாட்டுல வண்டி இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா" என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். "உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா..

அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.


இங்கு சுற்றுவட்டார பகுதிகளான சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு படி
க்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆவேசம்
 உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்கள்.


Friday, June 28, 2019

இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட கர்ப்பிணி- மயங்கிய நிலையில் அனுமதி

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்ப்பிணியான சாந்தி தேவி(30). இவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.



ஆம்புலன்ஸ் சேவைக்கு லைன் கிடைக்கவில்லை. அதற்குள் சாந்தி, மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு செல்ல 10 கிமீ பயணம் செய்ய வேண்டும். சாந்தியின் உடல்நிலை கருதி, அவரது கணவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் சாந்தியை ஏற்றினார்.

10கிமீ வாகனத்திலேயே சென்று சிஎச்சி எனும் மருத்துவமனையை அடைந்தனர். ஆனால், அங்கு சாந்தியை 27 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதனையடுத்து சிஎம்சி நிர்வாகம் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாந்தி தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சாந்தி தேவியின் கணவர் கமல் கூறுகையில், ‘நாங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற துடித்தோம். ஆனால், முடியவில்லை.

108 எண்ணுக்கும் முயற்சித்தோம். எவ்வித பலனும் இல்லை. எனவேதான் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றோம்’ என கூறினார்.

சாந்தி தேவி வசிக்கும் கிராமத்தினை அந்த தொகுதி  எம்பி மாதிரி கிராமமாக தத்தெடுத்தார். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.