வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tamilnadu political News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tamilnadu political News. Show all posts
Showing posts with label Tamilnadu political News. Show all posts

Saturday, December 04, 2021

சசியால் டென்க்ஷன் ஆன செல்லூர் ராஜூ | நள்ளிரவு 1 மணிக்கு பேச்சு.!!! | Sellur Raju Tension about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. தலைவர்களை விமர்சனம் செய்வது போன்றும், சசிகலாவை ஆதரித்து பேசுவது போன்றும் சமூக வலை தளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில வி‌ஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவதே கிடையாது.ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு நான் பேசுவது போல மிமிக்கிரி செய்து வி‌ஷமிகள் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

என் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான், நான் பேசாத கருத்துக்களை என் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார்கள்.

எனவே தற்போதைய நிலையில் கட்சி தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத்தேவை இல்லை. அந்த சூழ்நிலையும் எழவில்லை. என் குரலில் மிமிக்கிரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வி‌ஷமிகள் மீது கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Recent Posts Widget

Friday, December 03, 2021

சசிகலா எந்த காலத்திலும் பொதுச்செயலாளர் ஆக முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Ex Minister Jayakumar talk about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சேலத்தில் அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

அ. தி. மு. க. வில் பொதுக்குழு சர்வ வல்லமை மற்றும் அதிகாரம் படைத்தது. பொதுச்செயலாளரை பொறுத்தவரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர். இதனை யாராலும் மாற்ற முடியாது.

அதற்கு பதிலாக தான் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பதவிகளுக்கு தான் தேர்தல் நடைபெறுகிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்ப முடியும். இது ஒரு அடிப்படையான விஷயமாகும்.

மேலும் எந்த ஒரு மரபு மற்றும் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படவில்லை. இன்றைக்கு ஒரு பிரதான எதிர்க்கட்சியாக அ. தி. மு. க. விளங்குகிறது. தி. மு. க. வுக்கும், அ. தி. மு. க. வுக்கும் 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம்.

எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்னர் அ. தி. மு. க. இருக்காது என்று தி. மு. க. வினர் கூறினர். இன்றைக்கு எம். ஜி. ஆர். , ஜெயலலிதா நல்லாசியுடன் இரட்டை இலை என்கிற மேஜிக் வெற்றி சின்னம் உள்ளது. கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டாலும் முடிவில் முடிவுகள் என்பது ஒருமித்த கருத்துடன் உள்ளன. இதுவே ஒரு இயக்கம் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு சான்றாக இருக்க முடியும். சிலர் நீக்கப்பட்டதால் கட்சியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

யாரோ ஒரு சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்றால் அவர்களை அரசியல்வாதி என்று நிச்சயமாக கருதமாட்டேன். அவர்களை பொறுத்தவரை கொக்குகள் போல் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது? என பறந்து, பறந்து சென்று பார்க்கும் அரசியல் வியாபாரிகள். எம். ஜி. ஆர். , ஜெயலலிதா மீது பக்தி உடையவர்கள், அ. தி. மு. க. ரத்தம் ஓடுகின்றவர்கள் எந்த காலத்திலும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். 2-ம் கட்ட தலைவர்களை உருவாக்கி விடலாம். ஆனால் தொண்டர்களை உருவாக்க முடியாது.

சசிகலா கட்சி கொடியை பயன்படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளோம். போலீஸ் நிலையத்தில் கட்சி சார்பில் புகார் கொடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம்.

பொதுச்செயலாளர் என்று அவர், அ. தி. மு. க. கட்சி கொடியை பயன்படுத்துவதால் எந்த காலத்திலும் அதன்படி ஆகிவிட முடியாது. கூட்டணியை பொறுத்தவரை யார் வந்தாலும், வராவிட்டாலும் அவர்கள் விருப்பமாகும். அதை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


சேலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது: -

கட்சியில் எம். ஜி. ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திட்டங்களில் ஒன்றான பொதுச்செயலாளர் பதவி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நடைமுறைக்கு அது கொண்டு வரப்பட வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் விருப்பம். அப்படி ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அ. தி. மு. க. வுக்கு பொதுச்செயலாளர் பதவி ஒரு கண்ணாக இருந்தது. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரு கண்களாக இருக்கிறார்கள். சசிகலா வருகையை தொண்டர்கள் ஒரு சதவீதம் கூட விரும்பவில்லை. சசிகலா அ. தி. மு. க. வின் உறுப்பினர் கிடையாது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவார் என்று யாரும் கூறவில்லை. அ. தி. மு. க. வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. எதிர்காலம் அ. தி. மு. க. விற்கு செழிப்பாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் அ. தி. மு. க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, April 11, 2019

துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு?




காட்பாடியில் சிக்கிய, 11.50 கோடி ரூபாய், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளியான நிலையில், வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடியில் உள்ள இவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். 



இதையடுத்து, வேலுார் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், 8ம் தேதி புகார் செய்தார்.  அதில் கூறியிருப்பதாவது: மார்ச், 29ல், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் நடத்திய சோதனையில், 19 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் சிக்கியது. இது, கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கலின் போது கூறிய கையிருப்பு தொகையை விட, 10 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் கூடுதலாக இருந்தது. 



அடுத்து, ஏப்., 1ல் வருமான வரித்துறையினர், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார். எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. 



இதையடுத்து, காட்பாடி, டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர், புகாரின் மீது, எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது என, காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் ஆலோசனை நடத்தினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது, பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. 



இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.



சந்திக்க தயார்: குடியாத்தம் அடுத்த மோர்த்தானா அணை பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் கூறுகையில், 'வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு குறித்து முழுமையாக அறிந்த பின்பே, அது பற்றி கூற முடியும். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.' என்றார்.