வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Young Man arrested for slapping News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Young Man arrested for slapping News. Show all posts
Showing posts with label Young Man arrested for slapping News. Show all posts

Saturday, July 20, 2019

பைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு

இளம்பெண்ணை இழுத்து வைத்து கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர், பிறகு அவசர அவசரமாக தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு மின்னலென பறந்துவிட்டார்..

ஏன்? கவுந்தப்பாடி அருகே உள்ள பகுதி செந்தாம்பாளையம். இங்கு ஒரு இளம்பெண் தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி தன்னுடைய வீட்டுக்கு டூ வீலரில் போய் கொண்டிருந்தார். 


அப்போது பின்னாடியே ஒரு இளைஞர் பைக்கில் வந்தார். திடீரென அந்த பெண்ணின் டூவீலர் மீது பைக்கில் இடித்தார். இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழுந்துவிட்டார்.

பிறகு அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்டார். இதில் அந்த பெண் அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த இளைஞர் பைக்கை எடுத்து கொண்டு திரும்பி பார்க்காமல் பறந்தார். 
நடந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசில் பெண் புகார் கொடுக்கவும், இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், அந்த இளைஞர் பெயர் வல்லரசு என்பதும் வயசு 20 என்பதும் தெரியவந்தது.

இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறாராம்.. ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வல்லரசுவை பிடிக்கவில்லை. பலமுறை காதலை சொல்லியும் அந்த பெண் வல்லரசுவை ஏற்று கொள்ளவில்லையாம். 
இதனால் டென்ஷன் ஆகிவிட்ட வல்லரசு, தன் காதலியை நாலு சாத்து சாத்தலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக விரட்டி வந்து, பளார் பளார் என நாலு அறை விட்டு, அந்த பெண் கீழே விழுந்து எழுந்த பிறகுதான் அவர் காதலி இல்லை, வேறு ஒரு பெண் என தெரியவந்துள்ளது.

முகத்தை பார்த்ததும், பைக்கை எடுத்து கொண்டு எஸ்.ஆகி உள்ளார். இந்த விசாரணைக்கு பிறகு வல்லரசுவை கவுந்தப்பாடி போலீசார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் ஜெயிலில் அடைத்தனர்.