வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நடிகர்களெல்லாம் அரசியலுக்கு வர புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? விஜயை விளாசும் பொன்.ராதா.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

நடிகர்களெல்லாம் அரசியலுக்கு வர புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? விஜயை விளாசும் பொன்.ராதா.!



இது திரையுலக நடிகர்கள் அரசியலுக்கு படையெடுக்கும் காலம் போல. ரஜினி, கமல் தொடங்கி சண்டக்கோழி விஷால் வரை தங்களுக்கென ஓர் அமைப்பை தொடங்கி அரசியலுக்கு வரப்போகிறோம் என அறிவித்துவிட்டனர்.

சிலர் வந்தும் விட்டனர். இவர்களெல்லாம் வந்துவிட நீண்ட நாட்களாக தனது திரைப்படங்களில் அரசியல் குறித்து குறியீடுகளை வைத்து வந்த விஜய் மட்டும் அமைதியாக இருந்துவிடுவாரா என்ன?
இதோ சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அவரது சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நான் முதல்வரானால் என பேசி அதிர்வலைகளை கிளப்பிவிட்டார். 


ஆனால், நடிகர்கள் வெறுமனே திரைக்கவர்ச்சியை மட்டுமே அரசியலுக்கு வருவதனை எதிர்க்கவே செய்கின்றனர் அரசியல்வாதிகள். ஏற்கனவே, ரஜினி, கமலை விமர்சித்துவந்த அமைச்சர்கள் நேற்று முழுவதும் விஜயை வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், " நடிகர் விஜய் ஊழல்வாதிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசவேண்டும். அப்படி பேசினால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்" என தெரிவித்தார். மேலும், " எம்ஜிஆர், ஜெயாவுக்கு பிறகு மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிதான். புறம்போக்கு நிலம் போல நாதியில்லாத நிலையில் தமிழ்நாடு உள்ளது என்கிற சிந்தனையுடன் நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது" எனவும் விஜயை அவர் விமர்சித்தார். 

Popular Posts


No comments:

Post a Comment