வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விடுமுறை - கனமழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - Today Shool Leave - 05-10-2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 05, 2018

விடுமுறை - கனமழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - Today Shool Leave - 05-10-2018


கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை அதன் சுற்றுப்புறபகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்நிலயில் , சென்னையில்எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Popular Posts


No comments:

Post a Comment