வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. எம்.பி அதிரடி மிரட்டல்.. குளிரிலும் நடுங்கும் நீலகிரி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. எம்.பி அதிரடி மிரட்டல்.. குளிரிலும் நடுங்கும் நீலகிரி



"என்னை யாருன்னு நெனைச்சே... எல்லார் மாதிரியும் நான் கிடையாது... தொலைச்சு போட்டுட்டு... போயிட்டே இருப்பேன்" இப்படித்தான் போலீசாரை எம்பி ஒருவர் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இப்படி போலீசாரை உருட்டி மிரட்டி எடுப்பவர் நீலகிரி அதிமுக எம்பி கோபாலகிருஷ்ணன்தான். இவர், இதற்கு முன் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்தவர். கடந்த 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் இவர் வந்து 4 வருஷமாகிவிட்டது.

காணவில்லை
 எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை, எந்த மக்கள் பிரச்சனையையும் இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இப்படி ஒரு எம்.பி., இருப்பது கூட மாவட்ட மக்களுக்கு சரிவர தெரியாது. இவர் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்காததால், இவர் போட்டோவை போட்டு, "காணவில்லை" என்று போஸ்டர் கூட ஒட்டப்பட்டுவிட்டது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
சர்ச்சை எம்.பி
 அப்போதுகூட இவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் நிர்வாகிகள் சிலர் இவருக்கு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஒரு மேடையில் தன் கட்சிக்காரர்களேயே ஒருமையில் வசைபாடி, அசிங்கமாக திட்டி தீர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதுவரை இவர் குன்னூருக்கும் டெல்லிக்கும் பறந்தபடியேதான் இருப்பார்.



மூடியிருந்த கார் கண்ணாடி
 இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இரவு நேரம் என்பதால் ஒவ்வொரு வண்டியாக செக் செய்து கொண்டே இருந்தார்கள். அப்போதுதான் எம்பி கார் அங்கே வந்தது. காரை ஓட்டி வந்தது எம்.பியேதான். தற்போது ஊட்டியில் கடுங்குளிர், பனி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் கார் கண்ணாடி மூடியே இருந்ததால், உள்ளே இருப்பது யார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.


டிராக்சூட் அணிந்த எம்பி 
அதனால் காரை செக் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே இருந்தவரை கீழே இறங்கி வர சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு காரிலிருந்து சத்தத்தையே காணோம்.. யாருமே கீழே இறங்கி வராததால் போலீசார் மீண்டும் மீண்டும் சைகை காட்டி கீழே இறங்கி வர சொன்னார்கள். பிறகு டிராக்சூட் அணிந்த எம்பி காரிலிருந்து கெத்தாக இறங்கி வந்து போலீசாரை பார்த்தார். ஆனால் இப்படி தங்கள் முன்னால் வந்து நிற்பது அந்த தொகுதி எம்பி என்றுகூட போலீசாருக்கு அப்போதும் தெரியவே இல்லை. அதனால் கீழே இறங்கி வந்த எம்பி, அவராகவே பேச தொடங்கிவிட்டார்.



தொலைச்சிடுவேன்
 அங்கிருந்த எஸ்ஐ-யை நோக்கி, "எதுக்கு நீங்க பேட்ரோலிங்கா இருக்கீங்க. என்னை யாருன்னு நெனைச்சே... தொலைச்சிடுவேன்... என மிரட்டினார். உங்க எஸ்பி., டிஎஸ்பி எல்லாரையும் கூப்பிடு... எல்லாத்தையும் ஒழுங்கா வேலையை பாக்க சொல்லு... எல்லார் மாதிரியும் நான் கிடையாது... புரியுதா? தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என சரமாரியாக மிரட்டிவிட்டு, காரில் ஏறி பறந்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment