வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கிய தாய்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கிய தாய்



வாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை நகரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


அரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி தினேஷ் - ரக்‌ஷிதா. இவர்களுக்கு 3 வயதில் ருத்ரா என்ற மகன் இருக்கிறார். மகன் ருத்ரா. இவர்களது வீடு கோடம்பாக்கத்தில் உள்ளது. தினேஷ் ஒரு விஞ்ஞானி ஆவார். சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சம்பவத்தன்று, தினேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவே இல்லை. இதனால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரக்‌ஷிதா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். 
 
அவரது மகன் ருத்ரா கட்டிலில் பிணமாக சாய்ந்து கிடந்தான். அவனது முகம் வெந்துபோய் இருந்தது. இதை பார்த்து கதறி துடித்த தினேஷ் உடனடியாக வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், ரக்‌ஷிதா மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்தனர். முதல்கட்ட விசாரணையில், ரக்‌ஷிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அதனால்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment