வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 02, 2018

ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்..



"ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து லில்லிபாயை கொலை செய்தேன்" என்று இளைஞர் போலீசில் தெரிவித்துள்ளார். 

மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய போன இடத்தில் கள்ளக்காதல் ஏற்பட்டு, பின்னாடி கொலை வரை கொண்டுவந்து விட்டு விடும் என்று லில்லிபாய்க்கு தெரியாது. குமரி மாவட்டம் சேக்கல் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - லில்லிபாய். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன் ஒரு கூலி தொழிலாளி. லில்லிபலாய் குலசேகரம் பகுதியில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.


கால்வாயில் பிணம் கடந்த 19-ந் தேதி காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் ராத்திரி ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரை தேடி வந்தனர். ஆனால் மறுநாளே செட்டிசார்விளையில் சிற்றார்பட்டணம் கால்வாயில் லில்லிபாய் பிணமாக மிதந்தார். உடனடியாக திருவட்டார் போலீசார், தகவலறிந்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கள்ளக்காதல் விவகாரம் என தெரியவந்தது.


செல்போன் ரீ சார்ஜ் இது சம்பந்தமாக ராஜேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது: "நான் லில்லிபாய் வீட்டுக்கு பக்கத்தில்தான் வசித்து வருகிறேன். குலசேகரம் அருகே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறேன். அந்த கடையிலேயே ஒரு ஸ்டுடியோவும் வைத்துள்ளேன். செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார் லில்லிபாய். அப்போதுதான் எங்களுக்குள் கள்ளக்காதல் பற்றிக் கொண்டது. நிறைய ஊர்களுக்கு போனோம்... ஜாலியாக இருந்தோம்.


விரிவுபடுத்தினேன் எனக்கு பிசினசில் அடிக்கடி நஷ்டம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் லில்லிபாய்தான் எனக்கு பணம், நகை என்று கொடுத்து உதவி செய்தார். அதுவும் இல்லாமல் என் கடையை விரிவுபடுத்த எனக்கு ஆசை. அதற்காக லில்லிபாயிடம் அடிக்கடி நானாகவே பண உதவி கேட்டு வாங்கினேன். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
காரில் அழைத்து சென்றேன் இதுவரை 7 சவரன் தாலி சங்கிலி, 1 பவுன் காப்பு வாங்கி அடகு வைத்தேன். நகையை திருப்பி தருமாறு லில்லிபாய் நச்சரித்து கொண்டே இருந்தார். ஆனால் ஏற்கனவே நஷ்டத்தில் இருந்ததால் அந்த நகையை என்னால் தரமுடியவில்லை. அதனால்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். சமாதானம் செய்வதுபோல அவரை காரில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்றேன்.


கொலை செய்தேன் ரூம் எடுத்தேன். அங்கே நான் தண்ணியடித்தேன். லில்லிபாய்க்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தேன். பிறகு கால்வாயில் வீசிவிட்டேன். யாருக்கும் எதுவும் தெரியாதது போல இருந்து கொண்டேன். அவரது இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு கூட போய் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு வந்தேன்" என்றார். 


சிறுவனின் தந்தை இதனிடையே ராஜேஷ்குமார் லில்லிபாயை கொலை செய்து கால்வாயில் வீசும்போது, அவருடைய செல்போனை துப்பட்டாவில் சுற்றி வீசியிருக்கிறார். இந்த செல்போனை கால்வாயில் குளிக்க போன ஒரு சிறுவன் பார்த்து எடுத்திருக்கிறான். அதை கொண்டு போய் அவனது அப்பாவிடம் கொடுக்க, அவரும் அந்த செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். லில்லிபாய் செல்போனை ஆராய தொடங்கும்போது இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. தற்போது தொடர் விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment