வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 09, 2019

திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை

பல்லடம் அருகே திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.





திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 57). இவருடைய மனைவி கமலம் (50). இவர்களுடைய மகன் முத்துக்கிருஷ்ணன் (32). பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவருக்கும் திருப்பூர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி– ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் என்ஜினீயரிங் பட்டதாரியான தங்கமணிக்கும் (23) கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் முத்துக்கிருஷ்ணனும், அவருடைய மனைவி தங்கமணியும் பல்லடம் மகாலட்சுமி நகர் 10–வது தெரு, தெற்கு வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக முத்துக்கிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு வரும் முத்துக்கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்கமணிக்கு இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர்.


மேலும் உடல் நலம் குறித்து, தினமும் காலையிலும், மாலையிலும் வெள்ளியங்கிரி, தனது மகள் தங்கமணியிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி, தனது மகளிடம் பேசி உள்ளார். அப்போது தங்கமணி ‘‘ தனது கணவர், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதாவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும்’’ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெள்ளியங்கிரி தனது மகளின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள பல முறை முயன்றும், செல்போன் ஒலித்ததே தவிர, அவர் அதை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளியங்கிரி, தனது உறவினர்களுடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்தபோது வீட்டினுள், முத்துக்கிருஷ்ணனும், தங்கமணியும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள அறையில் கணவனும்–மனைவியும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளனரா? என்றுஅந்த அறையில் போலீசார் தேடினார்கள். ஆனால் எந்த கடிதமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தங்கமணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால், சப்–கலெக்டர் ஷ்ரவன் குமார் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 1½ ஆண்டில் தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment