வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 5வது குழந்தை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி.. மக்கள்தொகையைப் பெருக்க ஜப்பான் அதிரடி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 10, 2019

5வது குழந்தை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி.. மக்கள்தொகையைப் பெருக்க ஜப்பான் அதிரடி!

மக்கள்தொகையைப் பெருக்கும் முயற்சியாக, 5வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என ஜப்பான் நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக உள்ள பிரச்சினைகளில் ஒன்று மக்கள்தொகைப் பெருக்கம். ஆனால் இதற்கு நேர்எதிராக மக்கள்தொகை குறைந்து வருவதால் பெரும் கவலையில் இருக்கிறது ஜப்பான். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970களில் இருந்த மக்கள் தொகையைவிட அதிகம் குறைந்து வருகிறது ஜப்பானில். கடந்த 2017ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சம் தான். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டுகிறது. ஜப்பான் நாட்டின் சுகாதரம் மற்றும் தொழிலாளர் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது.


குழந்தைகள் சதவீதம்:  

ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், குழந்தைகளின் சதவீதம் என்பது 12.3 மட்டும் தான். ஆனால் அதுவே இந்தியாவில் 31 சதவீதமும், அமெரிக்காவில் 19 சதவீதமும், சீனாவில் 17 சதவீதமும் ஆகும். தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 12.7 கோடியாகும். இது வரும் 2065ம் ஆண்டில் சுமார் 9 கோடியாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.


ஜப்பான் கவலை:  

இதனால் அந்நாட்டு அரசு பெரும் கவலையில் உள்ளது. எனவே, ஜப்பானின் மக்கள் தொகையை பெருக்க அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறுது. அதாவது, மானியத்துடன் வீடு, இலவச தடுப்பூசிகள், பள்ளி கட்டணம், மற்றும் மானியத் தொகை என அள்ளிக்கொடுக்கிறது ஜப்பான் அரசு.


பணப்பரிசு தருகிறது:  

அவற்றில் ஒன்றாக ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நாகி எனும் ஊரில் குழந்தை பெற்றுக் கொண்டால் பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு மட்டும் மற்ற நகரங்களைவிட பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 6 ஆயிரம் தான். ஆனால் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், இந்த விவசாய பகுதிக்கு தங்கள் குழந்தைகளும் குடிபெயர பலரும் விரும்புகின்றனர்.


மாதாமாதம் பணம்: 

இந்த ஊரின் தனிச்சிறப்பே, குழந்தைகளுக்கு அந்த ஊரின் நிர்வாக அமைப்பு மாதாமாதம் பணம் கொடுப்பது தான். முதல் குழந்தைக்கு சுமார் 61 ஆயிரம் ரூபாய், இரண்டாவது குழந்தைக்கு ரூ.92000, 5வது குழந்தைக்கு ரூ.2.43 லட்சம் என ஒரு குடும்பத்துக்கு நிதியுதவி செய்கிறது ஜப்பான் அரசு.


கருத்தரிப்பு அதிகரிப்பு: 

இந்த நடவடிக்கைகளின் மூலம் நாகி நகரில் கருத்தரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இருந்ததைவிட, கருத்தரிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது நாகி நகரில் மட்டும் தான் கருத்தரிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment