வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம்

பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.





பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்கள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஏலம் விடப்படுகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார். 
நாட்டின் பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், தலைப்பாகைகள், நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்படுகிறது.
டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் மையத்தில் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் நேரடியாக இந்த பொருட்கள் ஏலம் விடப்படும் என்றும்  ஜனவரி 29 (இன்று) முதல் 30-ம் தேதி வரை மின்னணு முறையில் இ-ஏலம் விடப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்க விரும்புபவர்கள்  என்ற இணையதளத்தில் முழு விபரங்களை காணலாம். நேரடியான ஏலம் முறையில் இரண்டு நாட்களில் 270 பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது.
ஏலத்தில் பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமும், மரத்தாலான பைக்கும் அதிக விலைக்கு ஏலம் போனது. ஓவியத்திற்கு ரூ. 50 ஆயிரம் என்றும் பைக்கிற்கு ரூ. 40 ஆயிரம் எனவும் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் இரண்டும் அதிகப்பட்சமாக ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகியது. இ-ஏலம் முறையில் ஏலம் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment