வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஜித்து விளையாட்டு காட்டி மற்றவர்களை பயமுறுத்தி சிரிக்கும் விஜய் மகன்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 22, 2019

ஜித்து விளையாட்டு காட்டி மற்றவர்களை பயமுறுத்தி சிரிக்கும் விஜய் மகன்

ஜங்ஷனை அடுத்து விஜய்யின் மகன் இயக்கி நடித்துள்ள சிரி குறும்படம் தளபதி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


விஜய்யின் மகனுக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது. அதன் முதல் கட்டமாக அவர் குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறார். அவர் இயக்கி நடித்த ஜங்ஷன் குறும்படம் வெளியானது. இந்நிலையில் சிரி என்கிற குறும்படம் வெளியாகியுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஜேசன் சஞ்சய் தனது போனை கையில் எடுத்து தான் 10 நிமிடங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க முடியுமா என்று ஜேசன் சிரியிடம்(Siri) கேட்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்குள் சென்றபோது அவர் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அதனால் அவர் கதவை திறந்தபோது அதை பார்த்த சக மாணவர்கள் பேயோ என்று நினைத்து பயப்படுகிறார்கள்.


உருவம் 

சக மாணவர்கள் மிரள்வதை பார்த்து ஜேசனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் கண்ணாடி முன்பு நின்றபோது தான் அவரின் உருவம் அதில் தெரியாததை பார்த்து அவர் அதிர்ச்சி அல்ல மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு சக மாணவர்களை பயமுறுத்தி விளையாடுகிறார்.


ஆசிரியர்  

சக மாணவர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா வந்து வகுப்பறைக்குள் சென்று விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றுகிறார். அப்பொழுது அங்கு வரும் ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டுகிறார். அவர் சிரியிடம் கேட்ட 10 நிமிடங்கள் முடிந்ததை அவர் உணராமல் ஆசிரியரிடம் வசமாக மாட்டுகிறார்.


தமிழ் 

ஜங்ஷன் குறும்படத்தில் ஆங்கிலத்தில் அதிக அளவில் பேசினார்கள். சிரி குறும்படம் முழுக்க ஆங்கிலத்தில் தான் உள்ளது. ஜேசன் சர்வதேச அளவில் தனது குறும்படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைத்து இப்படி செய்கிறார் போன்று. சிரி குறும்படம் ஜேசனை சுற்றியே நகர்கிறது.

No comments:

Post a Comment