வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 22, 2019

கை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்..

கைகள் தனியாக, கால்கள் தனியாக என கனக்கச்சிதமாக பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை குப்பை மேட்டில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர் மாநகராட்சி ஊழியர்கள்!! 


பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இங்குதான் பாதி சென்னையின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படும். இப்படி கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்து கொட்டப்பட்ட குப்பையில்தான் வித்தியாசமான பார்சல்கள் இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்து சந்தேகப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


துண்டாக பார்சல்  

அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பெண்ணின் உடல் என்பதும், கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பார்சலாகி வந்தது என்பதும். ஆனால் உடலை மட்டும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


பச்சை குத்தப்பட்டுள்ளது 

விரைந்து வந்த போலீசாரும் இதுகுறித்து விசாரணையில் இறங்கினார். கொலை செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா என உடடினயாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதிருக்கும் என கூறப்படுகிறது. அவரது கையில் 2 இடங்களில் டாட்டூ எனப்படும் பச்சை குத்தப்பட்டுள்ளது.


பலாத்காரம்  

அதாவது வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண்ணாக இருக்கலாம் என தெரிகிறது. பார்சலில் உடல் பாகங்கள் இருந்தாலும், நேற்று அல்லது நேற்று முன்தினம்தான் கொலை நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் பலாத்காரம் செய்துதான் இந்த கொலை நடந்திருக்க நிறையவே வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.


கைரேகைகள் 

இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment