வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 60 நாட்கள் சும்மாவே படுத்திருக்கனும்... ரூ.12 லட்சம் சம்பளம்...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 31, 2019

60 நாட்கள் சும்மாவே படுத்திருக்கனும்... ரூ.12 லட்சம் சம்பளம்...!



ஜெர்மன் மொழி பேசக்கூடிய 12 ஆண்கள், 12 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க உள்ளனர். 60 நாட்களுக்கு அவர்கள் படுத்த படுக்கையாவே இருக்க வேண்டும்.


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்த இருக்கிறது. ஆய்வு என்றால் பெரிய வேலை இல்லை... 60 நாட்கள் சும்மா படுத்தே இருக்க வேண்டும்.


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து, செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில், விண்வெளி வீரர்களுக்கு இது எந்த அளவு உதவும் என்று தெரிந்துள்வதற்காக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதற்கான ஜெர்மனியில் சும்மாவே இருக்கும் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. ஜெர்மன் மொழி பேசக்கூடிய 12 ஆண்கள், 12 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க உள்ளனர். 60 நாட்களுக்கு அவர்கள் படுத்த படுக்கையாவே இருக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.


உணவு, கழிப்பறை, ஓய்வு எல்லாமே படுக்கை நிலையில்தான்.
இவர்களில் ஒரு குழுவினர் புவி ஈர்ப்பு இல்லாத பகுதியில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். 60 நாட்களுக்குப் பிறகு, இரு குழுக்களின் உடல் நிலை, மன நிலை ஆகியவை பரிசோதிக்கப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment