வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரட்டும் அதிகாரி - வைரல் வீடியோ
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 24, 2019

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரட்டும் அதிகாரி - வைரல் வீடியோ



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இன்று (24.03.2019) காலை சுமார் 9.30 மணியளவில் கொடூர் செல்வதற்காக சுமார் 30 பயணிகள் காத்திருந்தனர். அந்த நேரத்தில் T10 பேருந்து மதுராந்தகம் முதல் கொடூர்  வரை இயக்கப்படுவது வழக்கம். 

ஆனால் இன்று காலை அந்த பேருந்தினை மாற்று பகுதிக்கு அனுப்ப திட்டமிட்ட அதிகாரி சம்மந்தமில்லா காரணத்தினை கூறியுள்ளார். என்னவெனில், கொடூர் மார்கமாக செல்ல தற்போது பயணிகள் யாரும் இல்லை எனவே அந்த பேருந்தினை மாற்று ஊருக்கு செல்ல நேரம் நிர்ணயித்துள்ளதாக நடத்துனர் மற்றும் பேருந்து நிலைய நேர நிர்ணய அதிகாரி (Time Keeper) அவர்கள் கூறினார். 
ஆனால் அந்த நேரத்தில் சுமார் 30 பயணிகள் கொடூர் மார்கமாக செல்ல காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பயணிகள் சார்பில் ஒருவர் Time Keeper திரு.முத்துலிங்கம் அவரிடம் காரணம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

       "இன்னா இப்படி கேக்கற நீ...? எவ்வளவு பேரு இருக்காங்க..?? ஒரு  ஆளுக்கு ஒரு பஸ் அனுப்ப முடியுமா...? சும்மா போட்டோ எடுக்கற வேல லாம் வெச்சுக்காத.... மதுராந்தகத்துல பஸ் ஏற மாட்ட" இவ்வாறு கூறினார். இதன் வீடியோ பதிவு கீழே.....

இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு அல்லது போக்குவரத்து கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா...? அல்லது அதிக வருவாய் வரும் வழித்தடத்தில் தான் அதிக பேருந்துகளை விடுவார்களா...? தினந்தோறும் செல்லும் பேருந்தினை இப்படி இயக்கினால் அந்த மார்கத்தில் செல்லும் பயணிகளின் நிலை என்ன..? காத்திருந்து பார்ப்போம் அரசின் நடவடிக்கைகளை.....!!!

No comments:

Post a Comment