வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரு தாய் இந்த வேலைய செய்ததால் +2 மாணவி தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 26, 2019

ஒரு தாய் இந்த வேலைய செய்ததால் +2 மாணவி தற்கொலை




திருப்பூரில் ஸ்மார்ட் போன் வாங்கித் தர தாய் மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜா – மணிமேகலை தம்பதியினர். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனங்களில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். 



இவர்களுக்கு +2 படிக்கும் கோகிலா என்ற மகளும், 11ஆம் வகுப்பு படிக்கும் கோபிநாத் என்ற மகனும் இருந்தனர். தம்பதியினர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாக குழந்தைகளை கவனிக்க முடியாததால் புதுக்கோட்டையில் உள்ள மணிமேகலையின் தாய் வீட்டில் தங்கி படித்து வந்தனர். 



இந்நிலையில் +2 தேர்வில் 325 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதால் தனது தாயிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கோகிலா கேட்டுள்ளார். அடுத்த வருடம் வாங்கித் தருவதாக தாய் கூறினதால் மனமுடைந்த கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


No comments:

Post a Comment