வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் காதலியை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிய காதலன்: தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி | விசாரணையில் திடீர் திருப்பம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 15, 2019

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் காதலியை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிய காதலன்: தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி | விசாரணையில் திடீர் திருப்பம்

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை ரயில் நிலையத்தில் ஓடஓட காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலனும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 




சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் அந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு 7.50 மணிக்கு இளம் பெண் ஒருவர் மின்சார ரயிலில் ஏறுவதற்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தார். 





அப்போது வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து இளம் பெண்ணை வழிமறித்து பேச முயன்றார். அந்த இளம் பெண் அந்த வாலிபரை திட்டியபடி ரயில் நிலையத்திற்குள் வேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போதும் வாலிபர் விடாமல் இளம் பெண்ணின் கையை பிடித்து நிற்கும்படி வாக்குவாதம் செய்தார்.






ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் வழிமறித்த வாலிபரை கடுமையாக திட்டியபடி மின்சார ரயில் ஏற நடைபாதைக்கு வந்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். இளம்பெண் பயணிகள் கூட்டத்தில் வரும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வாலிபர் தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து இளம் பெண்ணிண் இடது பக்க தாடை மற்றும் இடது பக்க கையில் ஓங்கி வெட்டினார். 





இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓட முயன்றார். அப்போதும் அந்த வாலிபர் ஆத்திரம் தீராமல், இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி வெட்டினார். இதை நேரில் பார்த்த பயணிகள் நாலாபுறமும் சிதறி அங்கும் இங்கும் ஓடினர். இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.





பயணிகள் அலறி ஓடுவதை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர், எதிரே வந்த மின்சார ரயில் முன்பு பாய்ந்துதற்கொலைக்கு முயன்றார். அவர் குதிப்பதற்கு முன்பு ரயில் சென்றதால் தலையில் மட்டும் காயங்களுடன் நடைபாதையிலேயே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டுப்பட்ட இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.


உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 




அதேபோல், இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரையும் ரயில்வே போலீசார் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெட்டப்பட்டவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் தேன்மொழி(25). 




பட்டப்படிப்பு முடிந்த அவர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் எதிரே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவர் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள பிரபல பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 




அரிவாளால் வெட்டிய வாலிபர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர்(26). ஒரே ஊர் என்பதால் தேன்மொழியுடன் சுரேந்தர் நட்பு முறையில் பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் தேன்மொழி மீது சுரேந்தருக்கு காதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தேன்மொழியிடம் கூறியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் சுரேந்தர் காதலை அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.






இருவரின் காதல் விவகாரம் குறித்து தேன்மொழியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தேன்மொழியை அவரது ெபற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தேன்மொழியை பார்க்க அடிக்கடி சுரேந்தர் அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்துள்ளார். இதனால் தேன்மொழியுடன் வேலை செய்யும் ஊழியர்கள் சுரேந்தரை கண்டித்துள்ளனர். காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்ததால் ஒரு கட்டத்தில் தேன்மொழி தனது காதலனிடம் இருந்து விலக ஆரம்பித்தார். 




சுரேந்தர் பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் தேன்மொழி மீது சுரேந்தர் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தேன்மொழியை சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தேன்மொழி உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சுரேந்தர், தேன்மொழியை கொலை செய்ய முடிவு செய்தார்.





தேன்மொழி நேற்று இரவு பணி முடிந்து பெண்கள் விடுதிக்கு செல்ல மின்சார ரயிலில் ஏற வந்த போது சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதைப் போல சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

No comments:

Post a Comment